பெண்களுக்கு காமம் என்பது ஓர் ஆண் அவளை கட்டி தழுவி கொஞ்சும் போதே ஆரம்பமாகின்றது. ஆனால் ஆணுக்கு அது இயல்பாகவே உள்ளது. பெண்களை பொருத்தவரை காமம் ஒரு மேட்டர் அல்ல. ஆண்களுக்குதான் காமம் என்றால் ஓர் அலாதி பிரியம் இயல்பாகவே உள்ளது.
பெண்களுக்கு அதற்கு பதிலாக அன்பும் அரவணைப்பாலுமே உந்தப்படுவார்கள். எந்த பெண்ணையுமே காம ஆசை காட்டி எந்த ஓர் ஆணாலும் வெல்ல முடியாது. அதனால் தான் பெரும்பாலான பெண்கள் தனது காதலனிடமே தனது கற்பை இழந்து நிற்கின்றார்கள். காதல் வழியாக மாத்திரமே ஒரு ஆணால் ஒரு பெண்ணில் உடலை அடைய முடியும்.
ஆனால் ஆணுக்கு அப்படியல்ல அவனுக்கு ஓர் பெண்ணில் பிரதானமானது காமம் தான். பின்புதான் மற்றயவை இதுவே ஓர் பெண்ணுக்கு ஒரு ஆணில் காதல் தான் பிரதானமானது பின்புதான் மற்றயவை. அதனால் பெண்ணுக்கு காமத்தை அடக்க வேண்டிய தேவையே இல்லை. அவளது உடல் வாகு அப்படியும் இல்லை. காமத்தை அடக்க வேண்டிய தேவை ஆண்களுக்கே உள்ளது. அந்த வகையில் நாம் பெண்களை விட பலவீனமானவர்கள்தான்.
இதனால்தான் காமத்தின் பால், ஆண்களை விட பெண்கள் பலமானவர்களாக என்றும் நிலைத்து நிற்பதோடு அவர்கள் அன்பை வெளிப்படுத்த மோகத்தை ஒரு காரணியாக பயன்படுத்துவதில்லை. பெண்கள் வெளிப்படுத்தும் காதல் ஆண்களின் காதலைவிட ஒருபடி மேலானதாகவும் புனிதமாகவும் கருதப்படுவது இதனாலேயே...
No comments:
Post a Comment