மனிதன் தனது சுயத்தை இழக்கும் தருணம் கோபம் ஒன்றே. இக்கோபம் மூலமே மனிதன் தன்னுள் இருக்கும் குணாதியத்தை உண்மையாக வெளிப்படுத்தும் நிலைக்கு தல்லப்படுகின்றான்.
உணர்ச்சி கொந்தளிப்பின் வெளிப்பாடாக கோபம் வருகிறது. வெறுப்பு, வலி, பயம் ஆகியவையே கோபத்தின் வேர்களாக உள்ளன. ஆரம்பத்தில் எதிர்பார்ப்பின் காரணமாக வெறுப்பும், வலியும் ஏற்படலாம். நம்பிக்கையின்மை, அறியாமை, சந்தேகம் உள்ளிட்ட காரணங்களால் ஏற்படும் பயமும், கோபம் உருவாக காரணமாகலாம். நீங்களாக யோசித்துப் பார்த்தால் கோபத்தின் அடியில் இந்த உணர்ச்சி நிலை வெளிப்பாடுகள் காரணமாக இருப்பதை உணரலாம்.
கோபம் ஏற்படும்போது மூளையை ஆராய்ச்சி செய்த விஞ்ஞானிகள், ‘அமிக்டலா - Amygdala’ என்ற பகுதியில் இருந்து கோப உணர்வுகள் வெளிப்படுவதை கண்டுபிடித்தனர். உற்சாகம் தரும் விஷயங்களில் மனதை ஈடுபடுத்தினால் இந்த அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை குறைத்து கோபத்தை கட்டுப்படுத்திவிடலாம் என்றும் அவர்கள் கண்டுபிடித்தனர்.
உடலில் செரொடானின் (Serotonin) ரசாயனப் பொருள் அதிகமானால் தீவிர மனப்போக்கு தூண்டப்படும். இதுவே கோபம், எரிச்சல், வெறுப்பு போன்ற எதிர்மறை உணர்வுகளை தூண்டுகின்றன. செரோடானின் திரவத்தை கட்டுப்படுத்தினால் அமிக்டாலா பகுதியின் செயல்பாட்டை தடுத்து கோபத்தையும் இல்லாமல் செய்துவிடலாம்.
கோபமானது அட்ரினலின் (Adrenaline), கார்டிசோல் (Cortisol) போன்ற ஹார்மோன்களை அதிகமாக தூண்டுகின்றன. இவை ஒருவகையில் உடலுக்கு சில நிமிடங்களுக்கு தீவிர ஆற்றலை வழங்குகின்றன. அதனால் கோபம் அளவாக வருவது நல்லதுதான் என்று சொல்லப்படுகிறது. அளவுக்கு அதிகமான கோபமே, உடல் எந்திரத்தின் வேகத்தை அதிகமாக்கி எளிதில் சூடாக்கிவிடுகிறது. அது பலவித சிக்கல்களை தந்துவிடுகிறது.
கோபம் உணர்வுகளின் வடிகால் என்றும் கருதப்படுகிறது. கவலை, வலி, ஏமாற்றம் போன்ற வேதனையான உணர்வுகளின் வடிகாலாக கோபம் வெளிப்படுவதால் அது கொடிய உணர்வல்ல என்றும் விஞ்ஞானிகள் சொல்கிறார்கள். எனவே மற்றவர்களை காயப்படுத்தாத அளவுக்கு கோபத்தை வெளிப்படுத்துவது ஒன்றும் தவறல்ல.
கோபம் நமது திறன்களை பாதிக்ககக்கூடியது. கோபத்துடன் தொடர்புடைய ரசாயனப் பொருட்கள் மூளை செல்களை அழிக் கிறது. மேலும் புதிய மூளை செல்கள் வளர்வதையும் தடுக்கிறது. இதனால் கோபமானது நமது நினைவுத்திறனில் தடுமாற்றத்தை உருவாக்கும்.
உலகில் சரிபாதிக்கும் மேலானவர்கள் கோப வியாதியால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்கிறது ஒரு உளவியல் ஆய்வு. கோபத்தின் விளைவால் பகை, விரோதம், உறவு முறிவு, போர்கள், வன்முறைகள் நிகழ்வதால் கோபம் கட்டுப்படுத்தக்கூடிய உணர்வாக வலியுறுத்தப்படுகிறது. கோபம் அழிவின் பாதை என்பது அனைத்து மத போதனைகளிலும் சொல்லப்பட்டுள்ளது.
ஆண்களைவிட பெண்கள் கோபக்காரர்கள் என்று ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. அவர்கள், ஆண்களைவிட 12 சதவீதம் அதிகமாக கோபத்தை வெளிப்படுத்துகிறார்களாம். ஆனால் கோபத்தின் விளைவாக ஆண்களே அதிகமாக வன்முறையில் ஈடுபடுகிறார்கள் என்றும் அந்த ஆய்வு கூறுகிறது.
போதைப் பழக்கம் கோப உணர்வை அதிகமாகத் தூண்டி கொடுமையானதாக மாற்றும் என்றும் ஆய்வு கூறுகிறது. கோபத்தால் ஏற்படும் மன அழுத்தம் பல்வேறு நோய்கள் ஏற்பட காரணமாக உள்ளதாம். எனவே கோபம் கொள்ளக்கூடாது.
வீடியோ கேம்ஸ் விளையாட்டுகள் கோபத்திற்கும், தீவிர உணர்வுகளுக்கும் ஒரு காரணம் என்று நம்பப்பட்டது. ஆனால் விளையாட்டு நேரத்தில் மட்டுமே அவை தீவிர எண்ணத்தை உருவாக்குவதாக அறியப்பட்டு உள்ளது. விளையாட்டும், உடற்பயிற்சியும் கோபத்தை கட்டுப்படுத்தும் என்றே ஆய்வுகள் உறுதி செய்கின்றன. பழு தூக்கும் பயிற்சியைவிட, நீச்சல் பயிற்சி பலமடங்கு கோபத்தை கட்டுப்படுத்துகிறதாம். உங்களுக்கு கோபம் அதிகமாக வருகிறது என உணர்ந்தால் விளையாட்டிலாவது, உடற்பயிற்சியிலாவது கவனம் செலுத்துங்கள்.
ஆண்களின் பாலின ஹார்மோன்களான டெஸ்டோஸ் டிரோன்கள் (Testosterone), கோபத்தை அதிகம் தூண்டுவதாக அறியப்படுகிறது. டிஸ்னி லேண்ட் உள்ளிட்ட பொழுதுபோக்கு பூங்காக்கள் நிறைந்த அமெரிக்க நகரங்களான ஆர்லாண்டோ மற்றும் புளோரிடா போன்றவை அதிக கோபக்காரர்கள் வசிக்கும் பகுதியாக கணக் கெடுப்பில் தெரிய வந்துள்ளது அதிர்ச்சியான உண்மையாகும்.
‘இன்டர்லுகின்-6’ என்ற வைட்டமின்கள் குறைவு கோபத்தை தூண்டுவதாக ஆய்வு கூறுகிறது. இந்த வைட்டமின் பற்றாக் குறையால் இதய பாதிப்புகளும் ஏற்பட வாய்ப்பு உள்ளதாம். வைட்டமின்கள் நிரம்பிய காய்கறிகள், பழங்களை சாப்பிட்டால் இதன் பற்றாக்குறையை ஈடுசெய்யலாம். கோபத்தை கட்டுப்படுத்தும் பயிற்சிகள் வெற்றி வாய்ப்பை அதிகப்படுத்துவதாகவும் உளவியல் ஆய்வுகள் கூறுகின்றன. நீங்கள் வெற்றியாளராக உயர விரும்பினால் கோபத்தை குறைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment