Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, December 25, 2020

அருட்கொடையும் தண்டனையும்

ஒரு மனிதனுக்கு இறைவன் அளிக்கும் மிகப்பெரிய தண்டனைதான்  அவனை சமூகத்தின் மத்தியில்  அவமானப்படுத்துவதாகும் . இந்தக் காரணத்தினால்தான்  எப்போதுமே  ஒரு மனிதனுக்கு தனது சமூகத்தின் மீது ஒரு அச்சம் இருந்துகொண்டே இருக்கின்றது. பொதுவாக சமூக மட்டத்தில் அந்தஸ்து கூடிய நபர்கள் இந்தத் தாக்குதலுக்கு தொடர்ச்சியாக உள்ளாக்கப்படுகிறார்கள். தாங்கள் கொண்டிருக்கின்ற செல்வங்கள் இறைவனின் அருட்கொடைகளை மக்கள் மத்தியில் அனுபவிப்பதில் இந்த அச்சம் பெரியதொரு நேரடி தாக்கத்தை செலுத்துகின்றது. 

இதேவேளையில் தான் சம்பாதித்த கௌரவம் அந்தஸ்து மற்றும் மரியாதை என்பவற்றை தக்கவைக்க ஒரு மனிதன் தனது உச்சகட்ட அர்ப்பணிப்பையும் மனித துர்குணாதிசயங்களையும் வெளிப்படுத்த தயங்குவதில்லை. இதனால்தான் உயர் அந்தஸ்து அதிகாரத்தில் இருப்பவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தை தொடர்ந்தும் தக்கவைக்க போராடுவதை அவதானிக்க முடிகின்றது. இது பொதுவாக மனித இயல்பாகும். இந்த இயல்பு ஆரம்பத்தில் குறைவாக இருந்தபோதும் படிப்படியாக அவனது முன்னேற்றம் மேலும் விஸ்தீரணமடைந்து செல்லச்செல்ல இந்த இயல்பும் வளர்ச்சியடைந்த வண்ணம் இருக்கின்றது. 

உதாரணமாக ஒரு செல்வந்தன் தனது செல்வத்தை வெளிப்படையாகவும் பகிரங்கமாகவும் செலவழிப்பதற்கு ஒரு தடை இந்த சமூக அந்தஸ்து. ஏனெனில் சடுதியாக சமூக அந்தஸ்தையும் அதிகாரங்களை பெற்றுக் கொள்பவர்கள், தங்களின் கடந்தகால அனுபவத்தை எண்ணியெண்ணி தங்களை தாங்களாகவே ஒதுக்கி கொள்கின்றார்கள். 

செல்வங்கள் என்று சொல்லும்போது பொதுவாக எல்லோரும் நினைப்பது பணம் சொத்து இதர ஆடம்பர வாழ்க்கைக் கோலங்களையுமே. ஆனால் உண்மையில் செல்வங்கள் பொருத்தமட்டில் அது ஒரு மனிதனுடைய அறிவு ஆற்றல் மற்றும் உடல்ரீதியான ஆரோக்கியம் ஆளுமைகளை குறிப்பதாகும். மேலே நாம் பார்த்த அச்சப்படும் காரணிகள் உலக வாழ்க்கையில் அனைவராலும் கருதப்படும் செல்வங்களை குறித்ததாகும். இதற்கு எதிர்மாறாக ஒருவனின் ஒரு ஆன்மாவின் ஆற்றல் தான் வெளிப்படுகின்ற சூழலில் வெளிப்படையாக வெளிப்படுத்த எப்போதுமே அச்சம் ஒரு தடையாக இருப்பது கிடையாது.

இதனால்தான் சாதாரண ஒரு சிந்தனைவாதி செயற்பாட்டாளனும் பொருளாதார ரீதியாக முன்னேற்றமடைந்த மனிதர்களிலிருந்து வேறுபடுத்தப்படுகின்றான். இறைவன் அளிக்கின்ற அருட்கொடைகள் பொருத்தமட்டில் மேற்கூறிய இரண்டும் அருட்கொடையாகவே கருதப்படுகின்றது. யார் தங்களுக்கு அளிக்கப்பட்ட அருட்கொடைகளை கொண்டு சக மனிதர்களுக்கு பயனுடையதாக வாழ்ந்து மரணிக்கிறார்கள். அவர்கள் இந்த பூமியின் வாழ்க்கையை திறன்பட திட்டமிட்டவர்களாக கருதப்படுகின்றார்.


No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages