Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Thursday, September 24, 2020

குற்றவுணர்வும் மானிட சமுதாயா வாழ்வியலும்

ஒரு மனிதன் தன்னகத்தே செய்யும் குற்றம் எப்போதும் அவனை ஆட்சிசெய்துகொண்டே இருக்கும். இதனை நாம் எமது மொழி நடையில் மனசாட்சி என்றும் சொல்வோம். இந்த உணர்சி உண்மையில் எல்லா உயிரிகளுக்கும் உள்ள பொதுவான ஒரு உணர்திறன்தான். இருந்தபோதும் மனித சமூகத்திற்கு இந்த உணர்திறன் சற்று கூடுதலாகவே உள்ளது என்று கூறலாம்.

மனிதனின் பகுப்பாய்வு சிந்தனை திறன்தான் இந்த குற்றவுணர்வை உண்டாக்க காரணமாக அமைகிறது. அவன் கொண்டுள்ள சடங்கு, சம்ரதாயங்கள் மற்றும் தான் பின்பற்றும் சமூக வழக்காறுகள், சமய கட்டுப்பாடுகள், பண்பாட்டியல், சூழல் நியதிகள் மற்றும் வாழும் சூழலியல் சட்டங்கள் என்பனவே இந்த உணர்ச்சியை மதிப்பீடு செய்கின்றது.

ஒருவன் எந்த அளவிற்கு அவன் தன்னகத்தேயான பின்பற்றும் இயல்புகளிற்கு ஒழுகுகிறானோ அந்த அளவிற்கு அவனது மனசாட்சி திருப்தியை அளிக்குகின்றது. இதற்கு எதிர்மாறாக தான் கொண்டுள்ள கட்டுப்பாடுகளில் எல்லை கடத்தலை அல்லது வரம்புமீறுதலை உண்டாக்கினோ அவ்வளவிற்கு அவனது குற்றவுணர்ச்சி பீடிக்கின்றது.

எப்போதும் எல்லோருமே ஏதோவொரு குற்றவுணர்ச்சிக்கு அகப்பட்ட சிலந்திவலை பூச்சிகள் போலத்தான் உள்ளோம். இந்த தளம்பல் நிலைதான் எம்மை இந்த சூழலில் மானிடன் என்ற உணர்வு மீட்டுகின்றது. இந்த தொடர்ச்சியின் விளைவுதான் நாம் பல்லின மனிதர்களுடன் கொண்டுள்ள ஆளிடைத்தொடர்பின் விரிவு. அத்தோடு தன்னிலை ரீதியான குற்றவுணர்வின் தாற்பரியமே எம்மை இறையியல் குணத்தில் இருந்து நாம் பலவீனமானவர்கள் என்று வேறுபடுத்தி காட்டுகின்றது. தவறுகளை மீண்டும் மீண்டும் விரும்பியோ விரும்பாமலோ செய்து அதற்கான மிக அடிமட்ட குற்றப்பரிகாரமான குற்ற உணர்வு எமது மனசாட்சி நினைவு கூறுகிறது.

ஆனால் நாம் இங்கு கவனிக்கவேண்டிய முக்கிய ஒரு புள்ளிதான் குற்றவுணர்வு தூண்டப்படும் நிலைப்பாடு. இந்த குற்றவுணர்திறன் அடிப்படையிலேயே நாம் எமக்குள் சாட்சியம் அளிக்கிறோம் நாம் பாவியா அல்லது புன்னையவாலனா என்று....

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages