Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, June 3, 2020

கடல் ஏன் உப்பு

Image may contain: outdoor, nature and waterஇதற்கான பதிலை அறிவதற்கு முன் முதலில் நீரானது பூமிக்கு எப்படி வந்தது என தெரிந்து கொள்வோம். ஏனெனில் நீர் மூலக்கூறுகள் பூமியில் உருவானவை கிடையாது. பூமியில் நீர் உருவானதற்கு பொதுவாக இரண்டு காரணங்கள் கூறப்படுகிறது.
1. சோலார் நெபியுலா
2. விண்கல் மோதல்கள்
மேலே கூறப்பட்ட காரணங்களுள் ஏதாவது ஒன்றுதான் பூமியில் நீர் வந்ததற்கு காரணம் என அறிவியலாளர்கள் கணிக்கிறார்கள் (இரண்டு காரணங்களும் இருப்பதற்கு கூட வாய்ப்புண்டு).
சோலார் நெபியுலா
இந்தக் கருத்திற்கான விளக்கத்தைப் பெற சுமார் 4.6 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு நிகழ்வைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் (அதாவது சூரிய குடும்பத்தின் தோற்றம் பற்றி) . சூரிய குடும்பம் உருவாகும் போது சூரிய குடும்பத்தை சுற்றி வாயுக்களாலும் தூசுகளாலும் ஒரு மிகப்பெரிய மேகக் கூட்டம் சூழ்ந்து இருந்தது. இந்த மேகக்கூட்டமே சோலார் நெபியுலா (Solar Nebula) என்றழைக்கப்படுகிறது. அந்த மேகக்கூட்டத்தில் அதிக அளவில் ஹைட்ரஜன் அணுவும் ஆக்சிஜன் அணுவும் இருந்தன.
Solar Nebula Theory: Hypothesis on the formation of the Solar Systemஇந்த இரு அணுக்களும் அந்த காலத்தில் நிலவிய சூழலில் ஒன்றுடன் ஒன்று இணைத்து உலர்பனியாக மாறின. இந்த நிகழ்வின் மூலம் உருவான உலர்பனிகள் ஈர்ப்பு விசையின் காரணமாக ஒவ்வொரு கிரகத்தாலும் ஈர்க்கப்பட்டன. இந்நிகழ்வில் பூமியின் மூலம் ஈர்க்கப்பட்ட உலர்பனித் துகள்கள் பூமியின் வெப்பமான மேற்பரப்பில் பட்டு உலர் நிலையில் இருந்த அனைத்து மூலக்கூறுகளும் வாயு மற்றும் திரவ நிலைக்கு மாறின.
இந்த நிகழ்வு பல மில்லியன் ஆண்டுகளுக்கு நிகழ்ந்து பூமியின் மேற்பரப்பு வெப்பம் நன்கு குறையவும் நீர் மூலக்கூறுகள் நிலையான திரவத்தன்மை பெற்றன. இந்த நிகழ்வின் தொடக்கத்தில் உருவான அந்த மேகக் கூட்டத்தில் உருவான நீர் மூலக்கூறுகளை கொண்டு இந்த பூமியின் பெருங்கடல்களை 3 மில்லியன் முறைக்கு மேல் நிரப்ப முடியுமாம்.
விண்கல் வீழ்ச்சி
பூமியில் நீர் எப்படி உருவானது என்பதைப் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கிய நாசாவிற்கு நம்பும் அளவிற்கு உள்ள காரணமாக தென்பட்டது விண்கல் தாக்குதல் அல்லது சிறுகோள் வெடிப்பு (Asteroid Bombardment) என்ற கருத்தே ஆகும்.

Late Heavy Bombardment | Earth Blogஉலர்ந்த நீர் மூக்கூறுகளால் ஆன படிமங்களை (Crystals) தாங்கிய விண்கற்கள்(சிறு கோள்கள்) பூமியின் ஈர்ப்பு விசையினால் கவரப்பட்டு பூமியின் மீது மோதின. மோதிய எரிகற்களும், வால் நட்சத்திரங்களும் சுமந்துவந்த உறைந்த நிலையில் இருந்த நீர்படிமங்கள் பூமியின் வெப்பத்தை வேகமாக குறைத்தது மட்டுமின்றி திரவநிலைக்கும் மாறி மேற்பரப்பை மூட ஆரம்பித்தன. கோடிக்கணக்கான ஆண்டுகளாக நடந்த இந்த நிகழ்வில் வந்து மோதிய கோடிக்கணக்கான கற்களே இந்த அளவு நீர் பூமியை அடைந்ததற்கான காரணமாகக் கூறப்படுகிறது.
மேலே கூறப்பட்ட இரண்டு காரணங்களுள் எரிகல் வீழ்ச்சியே பல வகைகளில் நம்பகத் தன்மை கொண்ட காரணமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பூமியின் பெருங்கடல்களில் உள்ள நீரின் டியூட்டிரியம் - ஹைட்ரஜன் விகிதமானது (D/H ratio) எரிகற்களில் காணப்படும் D/H விகிதத்துடனே ஒத்தப்போகிறது.பூமியில் உள்ள நீரில் சோலார் நெபியுலாவின் தாக்கம் 1%–2% இருக்கலாம் என கருதப்படுகிறது.
ஆனால் இன்னும் இதற்கான துல்லியமான விடை கிடைக்கப் பெறாததால் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடந்துகொண்டு இருக்கிறது.

Where does the salt from the oceans come from? – Geomicrobesகடல் ஏன் உப்பாக இருக்கிறது?
அதன் உப்பு எங்கிருந்து வந்தது?
பூமி உருவான தொடக்கத்தில் பூமியின் மேற்பரப்பு முழுவதும் அதிக அளவில் குளோரைடும் சோடியமும் பரவி காணப்பட்டன. பின்பு பூமிக்கு வந்த நீர் மூலக்கூறுகள் சோடியம் குளோரைடை உயரமான இடங்களிலிருந்து தாழ்வான இடத்திற்கு கடத்திச் சென்று படிய வைத்தது. இந்த நிகழ்வு மீண்டும் மீண்டும் 200 முதல் 300 மில்லியன் ஆண்டுகளுக்கு நடந்ததால் பூமியின் உயரமான பரப்பிலிருந்து அனைத்து சோடியம் குளோரைடு மூலக்கூறுகளும் தாழ்வான பகுதியில வந்து படிந்தன. இப்படியாக பூமியின் பெருங்கடல்கள் உப்புத் தன்மை கொண்டவைகளாக மாறின.
இதற்கு ஆதாரமாக அதிக நீரோட்டம் கொண்ட பெருங்கடல்களில் உள்ள உப்புத்தன்மையை விட நால்புறமும் நிலத்தால் சூழப்பட்டு தேங்கியுள்ள கடல்கள் அதிக உப்புத்தன்மை கொண்டவைகளாக உள்ளன (உதா. சாக்கடல் - Dead sea). ஒருவேளை கடலானது உவர்ப்பாக இல்லையென்றால் இந்த பூமியே உப்பாகத்தான் இருந்திருக்கும்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages