
சில உயிரிகளால் சூரிய ஒளியில் மட்டும் நன்கு நிறங்களைப் பிரித்தறிய முடிகிறது. எடுத்துக்காட்டாக மனிதனைக் கூறலாம்.

சில விலங்குகள் மனிதனைவிட வேறு விதமான நிறங்களைப் பிரித்தறியும் தன்மையையும், இருளில் நன்கு பார்வைத் திறனையும் கொண்டுள்ளன. அவற்றைப் பற்றிப் பார்ப்போம்.

குறைந்த நிறங்களை அறியும் தன்மையும், இருளில் நல்ல பார்வைத்திறனும் உடையவை. பூனைகளும், நாய்களும் தங்களது கண்களில் இரண்டு விதமான வண்ண வாங்கிகளைக் கூம்புகள் கொண்டுள்ளன. இவைகளில் சிவப்புநிற வண்ண வாங்கிகள் காணப்படுவதில்லை. எனவே இவற்றால் சில நிறங்களை மட்டுமே பிரித்தறிய இயலும். இவைகளால் பொருட்களை ஊதா மற்றும் மஞ்சள் நிறநிழல்களாக மட்டுமே காண இயலும். உலகில் உள்ள பெரும்பாலான பாலூட்டிகள் இவ்வாறானவையாகவே காணப்படுகின்றன. பூனைகள் மற்றும் நாய்கள் தங்கள் கண்களில் அதிகளவு தண்டுகளைக் கொண்டுள்ளன. ஆதலால் அவைகள் இருளில் மனிதனைவிட அதிக பார்வைத்திறனைக் கொண்டுள்ளன.
மாடுகள், ஜல்லிக்கட்டு காளைகளுக்கு சிவப்புநிறம்/ அது சார்ந்த நிறங்கள் கோவத்தை ஏற்படுத்தும் என்று நம்புகின்றார்கள். உண்மையில் அவ்வாறு அல்ல...
பூச்சிகள் - Arthropod

நகருயிர்கள் - Reptiles
வெப்பஉணர்திறனைப் பயன்படுத்தி பார்த்தல்
மலைபாம்புகள், ரேடில்ஸ்நேக், பியாஸ் உள்ளிட்ட பிட் வைப்பர் இனத்தைச் சார்ந்த பாம்புகளால் அகச்சிவப்பு நிறங்களைக் காண முடியும். அதாவது அவற்றால் வெப்ப உணர்வின் மூலம் பார்க்க முடியும். இவ்வகைப் பாம்புகளில் மூக்கிற்கும், கண்களுக்கும் இடையில் அமைந்துள்ள சிறப்பு குழியால் நிமிட வெப்பநிலை மாற்றத்தை உணரமுடியும். இதனால் அருகில் வருகின்றன பொருட்களின் வெப்பநிலையைக் கொண்டு அவை மிகத்துல்லியமான அகசிவப்பு பார்வைத்திறனை பெறுகின்றன.

அவற்றின் கண்களில் தண்டுகள் இருப்பதில்லை. இருளில் பல்லியின் கண்களில் உள்ள கூம்புகள் தண்டுகளாக செயல்படும் பரிணாமத்தைப் பெற்றுள்ளன.

அதிக வண்ணங்களைப் பிரித்தறியும் உயிரினம்
மான்டிஸ் இறால் ஆகும். இதனை வண்ணம் பார்க்கும் ராஜ்ஜியத்தின் ராஜா என்றே குறிப்பிடலாம். இது 16 வகையான வண்ணவாங்கிகளைக் கொண்டுள்ளது. மனிதனைப் போல் பத்து மடங்கு வண்ணங்களைப் பிரித்தறியும் தன்மையைக் கொண்டுள்ளது. இவற்றால் அகச்சிவப்பு முதல் புறஊதா வரை உள்ள வண்ணங்களையும், துருவமுனைப்புள்ள வண்ணங்களையும் காணமுடியும்.
இவற்றின் கண்கள் தனித்தண்டுகளில் அமைந்து அவை தனித்தனியே உருளும் அமைப்பினைக் கொண்டுள்ளன. இவற்றால் ஒரே சமயத்தில் வெவ்வேறு திசையில் இருக்கும் எதிரிகளையும், இரையையும் அடையாளம் காணமுடியும்.
இயற்கையானது உணவு, இருப்பிடம், இனப்பெருக்கம், பாதுகாப்பு, இரைகௌவல் ஆகியவற்றிற்காக உயிரிகளுக்கு வண்ண பார்வையை வழங்கியுள்ளது. இயற்கை தந்த பரிசான வண்ண பார்வை மூலம் உலகைக் கண்டு மகிழ்வோம்.
No comments:
Post a Comment