Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, November 23, 2019

இயற்கை துறைமுகமான திருகோணமலையும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த எண்ணெய்க் குதங்களும்......

Image may contain: grass, plant, tree, outdoor and nature
திருகோணமலையில் உள்ள இப்பிரதேசத்தை யார் பார்த்திருகின்றீர்கள்.. திருகோணமலை எண்ணெய் டேங்க் பண்ணை! திருகோணமலை எண்னை குதங்கள். இது உலகத்தில் உள்ள பெரிய எண்னை குதங்களில் ஒண்று. ஒரே இடத்தில் அதிகளவில் காணப்படுவதாலும், இது சர்ச்சைகுரிய பூகோள ரீதியில் அமைந்த திருகோணமலையில் இருப்பதாலும் இதன் முக்கியத்துவம் முன்னிலையில் உள்ளது. இது பிரிட்டிஸ்காரர்களினால் இரண்டாம் உலக மஹாயுத்தபகுதியில் கட்டபட்டது. சுமார் 103 Tanks உள்ளன. ஒவ்வொண்றும் சுமார் 2.5 லட்சம் கிலோ லீற்றர் எண்னையை சேமிக்க கூடியது. இதில் உள்ள ஒரு விஸேட அம்சம் இதில் இரண்டு பெரிய குழாய்கள் உள்ளன. ஒண்றின் மூலமாக கடலில் இருந்து கப்பலில் வரும் எண்னைய உள்வாங்கி சகல வேண்டிய தாங்கிகளுக்கும் நிறப்பமுடியும். அதேபோல் மற்றைய குழாயின் வழியாக வேண்டிய தாங்கியிலிருந்து கப்பலுக்கோ அல்லது வேறு தேவைகளுக்கோ எண்னையை பெறமுடியும்.
Image may contain: tree, plant, outdoor and natureஇரண்டாம் உலக மஹா யுத்தத்தின்போது ஜப்பானின் தற்கொலை விமான தாக்குதலுக்கு உட்பட்ட இரு தாங்கிகள் இரண்டு வாரங்களுக்கு மேல் தொடர்ந்து எரிந்தன. அதில் ஒண்று அகற்றபட்டுவிட்டது. மற்ற ஒன்று இன்றும் பார்வைக்கு உள்ளது. திருகோணமலை எண்ணெய் குதங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பில், 2003ஆம் ஆண்டு இந்திய எண்ணெய் நிறுவனத்துடன் சிறிலங்கா அரசாங்கம் ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. அதில் நிதி தொடர்பான ஒப்பந்தமொன்றில் கையெழுத்திட வேண்டும் என்ற நிபந்தனையொன்றும் காணப்படுகின்றது.
அவை முறையான விதத்தில் நடைபெறவில்லை. தற்போது அது தொடர்பான வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதால் அது குறித்து அதிகம் கதைக்கமுடியாது. எனினும் நாம் அமைச்சு பதவியை பொறுப்பேற்கும் போது, இந்திய எண்ணெய் நிறுவனமே எண்ணெய் குதங்களை பயன்படுத்தி வந்தது.
No photo description available.

15 எண்ணெய் குதங்களை அந்த நிறுவனம் தற்போது பயன்படுத்தி வருகின்றது. எனினும் ஏனைய 18 எண்ணெய் குதங்கள் துருபிடித்து வருகின்றன. இதனை புனரமைப்பதற்கு இதுவரை யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலையில், அவற்றை அபிவிருத்தி செய்யவதற்கு அமைச்சரவை பத்திரத்தை தாக்கல் செய்துள்ளேன். திருகோணமலை எண்ணெய் குதங்கள் அமைந்துள்ள காணியின் உரிமை ஸ்ரீலங்கா அரசாங்கத்தினுடையது. அதில் 100 எண்ணெய் குதங்கள் உள்ளன. அதற்கமைய குறித்த அமைச்சரவை பத்திரத்தில் சில விடயங்களை குறிப்பிட்டுள்ளேன். அதில் முதலாவதாக எண்ணெய் குதங்கள் அமைந்துள்ள காணியின் உரிமைகளை ஸ்ரீலங்கா அரசு வைத்துக்கொண்டு புதிய ஒப்பந்தமொன்றுக்கு செல்ல வேண்டு்ம். இரண்டாவது, தற்போது இந்திய எண்ணெய் நிறுவனத்தால் பயன்படுத்தப்படும் 15 தாங்கிகளை அவரகளுக்கே பெற்றுக்கொடுக்க வேண்டும்.
மூன்றாவதாக, ஏனைய எண்ணெய் தாங்கிகளை இந்திய எண்ணெய் நிறுவனம் மற்றும் சிறிலங்கா எரிபொருள் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து உருவாக்கப்படும் பொது நிறுவனமொன்றுக்கு அபிவிருத்தி செய்வதற்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன். அத்துடன், 85 எரிபொருள் தாங்கிகளில் 16 தாங்கிகளை சிறிலங்கா எரிபொருள் கூட்டுத்தாபனத்துக்கு வழங்கும் யோசனையும் குறித்த அமைச்சரவை பத்திரத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.
Image may contain: outdoorகப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்வது மற்றும் வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகிக்கும் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்கவும் எதிர்பார்த்துள்ளோம். கொழும்பிலிருந்து வடக்கு, கிழக்குக்கு எண்ணெய் விநியோக்கிப்பதற்கு அதிகளவு நிதி விரயமாகின்றது. எனினும் திருகோணமலையில் இருந்து வடக்கு, கிழக்கு பகுதிகளுக்கு எண்ணெய் விநியோகிப்பதால் அதிகளவு நிதியை சேமிக்க முடியும்.
அத்தோடு இவ்வெண்ணெய்க் கிணறுகள் காணப்படும் இந்த பெரும் காட்டினுள்ளே யானைகள், காட்டு பன்றி, மான், மரை, நரி, கரடி, பலவகை குரங்குகள்,மயில் ,நச்சு பாம்புகள் மற்றும் மலைபாம்புகள் போன்ற உயிரினங்கள் இன்றும் உள்ளன. இப்போது, இதின் ஆதிக்கம் இந்தியா வசம் உள்ளது. ஆனாலும், அமரிக்காவுக்கும் இதில் ஒரு கண் உள்ளது.
Image may contain: tree, plant and outdoor
இது திருகோணமலையின் உட்துறைமுகத்துடன் தொடர்புடையது. இந்த துறைமுகத்தினுள் சுமார் 400 பெரிய கப்பல்களை வெளியாருக்கு தெரியாமல் ஒழித்து வைக்கமுடியும். இந்த வசதி உலக மஹா யுத்ததின்போது பெரிதும் பயன்பட்டது.

இந்தியாவின் இருபக்கங்களில் இருக்கும் நாடுகள் ஒரு பக்கத்திலிருந்து மறுபக்கம் செல்லுவதற்கு இலங்கையை சுற்றிதான் செல்லவேண்டும். அதன்போது அவற்றுக்கு தேவையான எண்னை, தண்னீர் மற்றும் பழுதுபார்கும் தேவைகளுக்கு இலங்கை ஒரு முக்கியமான இடமாகும். மேற்கூறிய காரணங்களின் அடிப்படையில் இலங்கையும் திருகோணமலையின் இயற்கை துறைமுகமும் சர்வதேச அளவில் முக்கியத்துவம் பெற்றதுடன் வல்லரசுகளின் கழுகுப்பார்வையில் ஒரு முக்கிய இடத்தை பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages