Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Friday, July 5, 2019

வளர்ச்சியடையும் தொப்புள்கொடி மருத்துவம் (Stem Cell Treatments)

Related imageநவீன மருத்துவ துறையில் விஞ்ஞானிகள் மற்றும் மருத்துவ நிபுனர்களிற்கு தீர்க்கமுடியாத பாரிய நோய்களிற்கு தீர்வாக அமைந்துள்ளது தொப்புள்கொடி மருத்துவ முறை. இந்நடைமுறை அண்மைகால மருத்துவ முறையன்று. மாறாக எமது முன்னோர்கள் கூட இந்நடைமுறையை காலாகாலமாக பயன்படுத்தி வந்துள்ளார்கள்.
பண்டைய தொப்புள்கொடி மருத்துவம் 
No photo description available.70~90s Kids வரை தங்களில் இடுப்பு பகுதியில் அணிந்திருந்த அரைஞான் கொடியில் குப்பியில் அடைக்கப்பட்ட தூள்தான் அது....
அந்த காலத்தில் குழந்தை பிறந்தவுடன் தொப்புள்கொடியை அறுத்து அதை நன்கு பிழிந்து சில நாட்கள் நன்றாக காயவைத்து அதை நன்கு அரைத்து பொடியாக்கி பின்பு அந்த பொடியை ஒரு தாயத்தில் அடைத்து அதை இடுப்பிலோ அல்லது கழுத்திலோ கட்டி விடுவார்கள். பிற்காலத்தில் அந்த குழந்தை வளர்ந்து பெரியவரானதும் ஏதேனும் கொடிய நோய் தாக்கினால் நாட்டு வைத்தியர்கள் அந்த தாயத்தில் உள்ள தொப்புள்கொடியில் காணப்படும் தூளை எடுத்து அதை நீரிலோ அல்லது பாலிலோ கலந்து கொடுப்பார்கள். சில நாட்களில் நோயும் குணமாகிவிடும்.
Related imageஅறிவியலின் பார்வையில்
மூலவுயிர் கலங்கள் (Stem Cells) என்று அழைக்கப்படும் முதன்மை கலங்கள் மூலமாகவே எமது உடலில் காணப்படும் அனைத்து கலங்களும் தோற்றம் பெற்றுள்ளது. இக்கலங்கள் குழந்தை கருவுறும் காலத்தில் தோற்றம்பெறும் அடிப்படையான கலங்கலாக காணப்படும். இவ்வாறான காலங்கள் அதிக செறிவாக தொப்புள்கொடி பகுதியில் காணப்படும். இது குறித்த குழந்தையின் உடலில் காணப்படும் கலங்களை மீளுருவாக்கும் திறன் கொண்டவை என்பதை அண்மைய மருத்துவ விஞ்ஞானம் கண்டறிந்துள்ளது.
தொப்புள்கொடி மருத்துவம் என்றா என்ன?
தொப்புள்கொடிகளை கொண்டு மருத்துவ சிகிச்சை செய்யும் முறையே இது. அநேக நாடுகளில் பிறக்கும் குழந்தைகளின் தொப்புள்கொடி (Umbilical cord) பகுதியினை காப்பு செய்யும் (Cord blood banking) நடைமுறை வழக்கிற்கு வந்துள்ளது. இவ்வாறு காப்பு செய்யும் தொப்புள்கொடிகள் குறித்த நபரின் தனித்துவ அடையாளமாக பேணப்படும்.
Related imageசில வேளைகளில் குறிப்பிட்ட நபருக்கு ஏற்படும் புற்றுநோய், பார்வை குறைப்பாடு (Macular Degeneration), நரம்புசார் நோய்கள் (Multiple Sclerosis), இதய நோய்கள் (Heart Disease) மற்றும் நீரிழிவு போன்ற பாரதூராமான நோய்களுக்கு சிக்சை முறையாக பயன்படுகின்றது. அத்தோடு விபத்துக்களில் உடைவுறும் எலும்பு மற்றும் சில முக்கிய உறுப்புக்களை விரைவாக குணமடைய செய்ய தொப்புள்கொடி பகுதிகள் பயன்படுத்துப்பட்டு வருகின்றது.
Image result for stem cells medicineவிசேட பயன்பாடுகள்
1. குறித்த நபரின் அடிப்படை கலத்தை கொண்ட பகுதி ஆனதனால் சிகச்சை முறைக்கு சாதகமான இரத்த வகை மற்றும் கல வகையை கொண்டிருக்கும்.
2. விரைவாக பெருக்கமடையும் கலங்கள் அதிகம் இதில் காணப்படுவதனால் காயம் ஆறுதல் விரைவுபடுத்தப்படும்.
3. நோய் எதிர்ப்பு திறன் அதிகமாக இக்கலங்களில் காணப்படும்.
4. எல்லா வகையான கலங்களையும் தோற்றுவிக்கும் திறன் உண்டென்பதனால் உடலின் எப்பாகத்திலும் இக்கலங்களை பயன்படுத்த முடியும்.
5. DNA பகுப்பாய்வில் இக்கலங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றது.
தேடல் வலைதளங்கள் 
https://www.acog.org/Patients/FAQs/Cord-Blood-Banking?IsMobileSet=false
https://www.cryo-cell.com/cord-blood-banking
https://www.nature.com/articles/stemcells.2007.23
https://www.closerlookatstemcells.org/stem-cells-medicine/
https://www.closerlookatstemcells.org/stem-cells-medicine/nine-things-to-know-about-stem-cell-treatments/

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages