பிரமிட் உலக அதிசயங்களில் கடந்த 4000 ஆண்டுகளாக தொடர்ந்து இருந்துவருகின்றது. இதற்கான காரணம் என்ன? நான்காயிரம் ஆண்டுகள் அதிசயமாக திகழ அப்படி என்னதான் அதில் உள்ளது என்று பல சந்தேகம் உண்டாகலாம். உண்மையில் அதற்கான பல தகுதிகளை தன்னகத்தே கொண்டு அமைந்துள்ளது பிரமிட்டுக்கள்.
அவ்வகையில் நாம் உலகத்தில் பார்க்க வேண்டிய அதிசயங்களில் மிக மிக்கியமான ஒன்று பிரமிட்டு. உலகில் இருக்கும் ஒவ்வொரு அதிசயமும் விளங்க முடியாத ரகசியத்தைக் கொண்டுள்ளது. பிரமிடுகள் தனக்குள் கொண்டிருக்கும் ரகசியத்திற்கு இவ்வறிவியல் யுகத்தில் கூட விடைகாணமுடியாத நிலையில் விஞ்ஞானம் உள்ளது....
இவ்வளவு எடை கொண்ட கற்களை அய்நூறு அடி உயரத்திற்குக் கொண்டு சென்றது மட்டுமன்றி ஒவ்வொரு கட்களிற்கும் இடையில் உள்ள இடைவெளி சுமார் 1mm அளவில் எவ்வாறு நுட்பமான சேர்த்து வைத்தார்கள் என்பதும் விந்தைதான். வெளிப்புற வெப்பநிலை 50 பாகை செல்சியசில் இருந்தபோதும் உள்ளக வெப்பநிலை 20 பாகை செல்சியசில் பகல், இரவில் பேணப்படுவதும் அதிசயம்தான். சுண்ணாம்புக் கற்களின் மேலடுக்குகள் நன்றாக பாலிஷ் செய்யப்பட்ட பளிங்கு சுண்ணாம்புக் கற்களால் வெளிப்புறம் பதிக்கப்பட்டுள்ளன. இதனால் இவை பகல் வேளையில் தங்க நிறத்திலும் இரவு வேளையில் சிவப்பு நிறத்திலும் காட்சி தரும்.

பிரமிடின் உள்ளே உள்ள உடல்கள் கெடாமல், மாறாக முற்றிலும் உலர்ந்த நிலையில் உள்ளன. இது ஆராய்ச்சியாளர்களின் ஆய்வுக்குப் பெருந்தீனியாக உள்ளது! இன்னும் முற்றிலுமாக கண்டறியப்படாத உள் அறைகளின் பயன்பாடுகள், குறுக்கும் நெடுக்குமாகச் செல்கின்ற சதுரத் துளைகளின் பயன்பாடுகள் திருட வருபவர்களைக் குழப்புவதற்காக அமைக்கப்பட்ட தந்திரப் பாதைகள்.2004 இல் ரோபோக்களை உள்ளே செலுத்தி பார்வையிட்டபோது பல உள்பக்கம் அடைக்கப்பட்ட கதவுகள் கண்டறியப்பட்டது.

எகிப்தில் கட்டப்பட்டுள்ள வியக்கத்தக்க கோபுரங்களும், பிரமிட் கூம்பகங்களும் ஒரு புதிரான வரைகணித [Hermetic Geometry] முறையில் திட்டமிட்டுக் கட்டப்பட்டதாகத் தெரிகின்றன! அந்தக் கணித முறை நுணுக்கங்களைப் புரிந்து பண்டைக் காலத்தில் பயன்படுத்திய எகிப்தியர் மிகச் சிலரே.
இந்தப் பிரமிடுகளில் ஏராளமான மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. மம்மிப்படுத்துதல் பற்றி...
1. இறந்தவரின் உடலைத் தனியாக ஒரு கூடாரத்திற்கு எடுத்துச்சென்று, மரணக் கட்டிலில் அவரைக் கிடத்தி பேரீச்சை மதுவாலும் நைல் நதி நீராலும் கழுவுவார்கள்.

3. நுரையீரல், கல்லீரல், வயிற்றுப் பகுதிகள், குடல் பகுதிகள் எடுக்கப்பட்டு கல் உப்பில் பதப்படுத்தப்படும்.
4. இருதயம் அறிவின் இருப்பிடமாக எகிப்தியர்களால் கருதப்பட்டதால் அது உடலுக்குள்ளேயே இருக்கும்.
5. ஒரு வளைந்த கம்பியை மூக்கின் வழியாக விட்டு உடைத்து, மூளையை எடுத்துவிடுவார்கள். (உண்மையில் அறிவு என்பது மூளை தொடர்புடையது என்ற அறிவு அந்தக் காலத்தில் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது)
6. உடல், கல் உப்பால் மூடப்படும்.
7. நாற்பது நாட்கள் கழித்து உடலை மறுபடியும் நைல் நதி நீரால் கழுவி, அதன்மீது வாசனை எண்ணெய்களைத் தடவுவார்கள்.
8. உடற்பகுதிகள் தனித்தனியாக ஜாடிகளில் (canopic jars) வைக்கப்படும்.
9. உடலை, பிசின் தடவிய துணியால் இறுக்கமாகச் சுற்றுவார்கள். தலை, கைகள், கால்கள், உடல்பகுதி தனித் தனியாகச் சுற்றப்படும்.
10. இறுதியில் பிரமிடுகளின் மய்யப்பகுதியில் அரச மரியாதையுடன் எடுத்துச்சென்று அடக்கம் செய்யப்படும், அரசர் பயன்படுத்திய அனைத்துப் பொருள்களும் பிரமிடில் வைக்கப்படும். இதில் தங்க வைர நகைகள் மற்றும் இதர விலையுயர்ந்த பொருட்களும் அடங்கும்.

இவ்வாறான பல மனித சிந்தனைக்கு அப்பால்பட்ட பிரமிட்டை அமைக்க மனித வலு சக்தி பயன்படுத்தபடமால் வேற்றுக்கிரகவாசிகள் சக்தி பயன்படுத்தப்பட்டதாக சில விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள்.
"அவை ஸுலைமான் விரும்பிய, மிஹ்ராபுகளையும், சிற்பங்களையும், தடாகங்கள் போன்ற பெருங் கொப்பரைகளையும், நகர்த்த முடியா பெரும் பாத்திரங்களையும் செய்து கொண்டிருந்தன" (அல்-குர்ஆன் 34:13)
No comments:
Post a Comment