Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, March 13, 2019

கனவுகளும் சிறுகதை இலக்கியமும்....

Image result for dream and literature
கனவும், இலக்கிய சிறுகதையும் ஒரே ஒத்திசை இயல்பை கொண்டவை. கனவுகளை பொருத்தமட்டில் மூன்றுவகை கதை களத்தை பின்னணியாக கொண்டு நகரும்.
ஒன்று - தன்னைத் தானே கனவின் களத்தில் காண்பதும் அதை கொண்டு கதை நகர்வு அமைவதும். இக்கனவுகளில் உங்களின் முகத்தை நீங்களே கனவில் காணமுடியும். இவ்வகை கனவுகளை ஒத்த களத்தையே பெரும்பாலான மரபுவழி சிறுகதை எழுத்தாளர்கள் அதிகம் ஆகர்சிக்கின்றார்கள்.
Image result for dreamஇன்றாம் நிலை - கனவின் எல்லைக்குள் நாம் இருப்போம். ஆனாலும் கனவு பிரதானமாக இருவேறுபட்ட கதாப்பாத்திரங்களை கொண்டு நகர்வு பெரும். எமது கடமை கதாப்பாதிரங்களுக்கான கதை களத்தை கொடுப்பது. இவ்வகை பாணியை அண்மைய இடைநிலை எழுத்தாளர்கள் குறிப்பாக பேர் எழுத்தாளர்கள் கையாள்வதை உணரலாம்.

மூன்றாம் தரப்பு - கனவு காட்சி அமைப்பின் மூன்றாம் நிலை கதை களத்தைவிட்டு வெகு தொலைவில் எமது பாத்திரம் அமையும். தொடர்பற்ற வகிபாகத்தை கொண்டிருக்கும் நாம் ஏதோவொரு கட்டத்தில் மட்டும் பங்குபெற வாய்ப்பு கிடைக்கும். அந்நிலையில் கனவின் முழு கதை அமைப்பும் எம்மை சார்ந்துவிடும். மூன்றாம் நிலை அமைப்பையே நவீன எழுத்தாளர்கள் பிரதான போக்காக காணமுடிகிறது. இதற்கான காரணம் சூழலில் அவர்களின் அனுபவ, சம்பவங்களை கதைக்களமாக மாற்ற முயற்சிக்கிறார்கள்.
Image result for dreamமேற்படி மூன்று நிலைகளிலும் இரு வேறுப்பட்ட ரசனை திரைமறைவு வெளிப்படும். இது கீழத்தேய, மேலைத்தேய இலக்கிய சாயலையும் மரபையும் மூலமாக கொண்டவை. பங்குபெறும், நிலைகொள்ளும் கதை களத்தின் முடிவும், தான் கூற முனையும் கருத்தும் அதில் தாக்கத்தை செலுத்துகிறது.

உண்மையை உண்மையாக கூறுவதும், உண்மையோ பொய்யோ அவற்றை ரசனையோடு மெருகூட்டி கூறுவதும் அவற்றின் தத்துரூபம். அத்தோடு முடிவு மகிழ்வாகவும், சோகமாகவும் முடிவுறும் பின்னணியில் மற்றுமொரு நவீன எழுத்தாளர்களின் புதுமை முடிவை தொக்கிவைத்து வாசகன் தீர்மானத்திற்கு ஒப்படைப்பது. இதில் வாசகன் குழப்பம் அடைவதோடு மாத்திரமன்றி அவன் திருப்தியும் அடைகிறான் என்று முழுமையாக சாடமுடியாது. எனினும் கதை வாசகன் மத்தியில் தாக்கம் ஏற்படுத்துகின்றது என்பதை மட்டும் முழுமையாக நம்பமுடியும்........

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages