Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, December 8, 2018

கலைஞன் ஒருவன் உயிர்த்தெழுகிறான்

Image may contain: Zahir Abdul Jabar, textரசிகர்களின் வாழ்த்துமடல் 
ஒரு சமூகத்தில் பல்வேறுபட்ட கலைஞர்கள் காலாகாலம் உதயமாகிக்கொண்டே இருக்கின்றார்கள். அவ்வகையில் மிலேனிய நூற்றாண்டில் கலைவடிவம் நவீனத்துவ பரிணாமம் பெற்று உயிர்வாழ்ந்து வருகின்றது தொழிநுட்ப வளர்ச்சியினால்.

ஒரு கலைஞனின் திறன் மற்றும் அவனது வெளியீடுகள் அந்த கலைஞனை சார்ந்த சமூகத்தின் பின்னணியில் மருவி நிற்கின்றது. கலைஞர்களின் பொதுவான இயல்பே கைதட்டல்களையும் பாராட்டுக்களையும் எதிர்பார்ப்பது. அவை மக்கள் மன்றத்தில் இருந்து எவ்வளவுதூரம் கிடைக்கப்பெருமோ அந்த அளவிற்கு தரமிக்க வெளியீடுகள் அல்லது படைப்புக்கள் குறித்த கலைஞன் இடத்தில் இருந்து பிறக்கும்.
Image may contain: 4 people, people standingஅவ்வாறான ஒரு கலைஞனை ஈன்றது சமகால மூதூர் மண்ணும் மூதூர் மண்ணின் முகநூல் தொடர்பாடலும்.
காலத்தால் அழிந்துவரும் ஒரு பாரம்பரிய கலாசார அம்சமே மண்வாசனை நகைச்சுவைகள். அவை இயந்திர நாகரீகத்தில் இன்றைய தலைமுறை ஒன்றடக்கலந்து பயணிக்க முன்னுள்ள தலைமுறையோடு உலாவிவந்த பண்பாட்டு அம்சம். ஆனால் தலைமுறை இடைவெளி மற்றும் நாகரிக உலகின் மோகங்கள் என்பன பல மானிடவியல் இடைத்தொடர்புகள் கொண்ட மண்வாசனை கலாசாரங்களை களையெடுத்துவிட்டது எனலாம்.

அவ்வகையில் அன்றைய பாரம்பரிய அம்சங்களை இன்றுள்ள தலைமுறையில் ஒருசிலர் புதுபிக்க முயன்று அதில் பாரிய வரவேற்ப்பையும் பெற்றுவருகின்றார்கள். அப்படியான ஒரு நபரே அப்துல் ஜப்பார் சாகீர்.
Image may contain: one or more people and textமுகநூல் வாயலாக மூதூர் நகைச்சுவை என்ற தொடர் ஆக்கத்தை பதிவு செய்து இதுவரை 150 நகச்சுவை வெளியீட்டை பதிவுசெய்துள்ளார். இவரின் முயற்சியை பாராட்டும் வகையில் அவரின் ரசிகர்கள் அவருக்கான வாழ்த்துமடல் தொகுப்பு நூல் ஒன்றை எழுதி வெளியீடு செய்து அவருக்கு அன்பளிப்பு செய்துள்ளார்கள்.

மண்வாசனை_முகநூல்_எழுத்தாளன்
எவ்வளவு பெரிய இலக்கிய எழுத்தாளர்களாக இருந்தபோதும் மண்வாசனை சார்ந்து அவர்களின் மொழிநடை மற்றும் ஆக்கங்கள் வெளியீடு செய்யப்படுவது அரிதே. காரணம்  #மண்வாசனை_சார்ந்த_படைப்பில்_உள்ள_தனித்துவ_குணாதிசயம் மற்றும் #செழுமைப்பாங்குடன்_கூடிய_செயலூக்கம் சற்று சளைச்சலை வாசகர்களுக்கு உண்டாக்கும் என்ற மனோநிலைமை. இதன் காரணமாக மண்வாசனை சார்ந்த புத்தாக்கம் புத்தியிர்ப்பது புதினமாகவே இருக்கும் இலக்கிய உலகில்....

Image may contain: 2 people, including Zahir Abdul Jabar, people smiling, people standing and beardமற்றுமொரு காரணம் மண்வாசனை சார்ந்த சாதிப்பில் உள்ள சலனமும் சிக்கல்த்தன்மையும். இருந்தபோதும் இவ்வாறன ஆக்கங்களை ஒருசிலர் மாத்திரம் லாவகமாக கையாள்வது ஒரு அதிய கண்ணோட்டத்தில் காண்கின்ற காட்சியை அத்துறை சார்ந்தவர்களிடத்தில் பிரதிபலிக்ககூடியதாக அமையும். அவ்வாறான ஒருவரே இந்த பதிவின் காதாநாயகன்.

மிக அண்மையில் அறிமுகமான எனது ஊரை பிறப்பிடமாக கொண்ட முகநூல் சகோதரர் மற்றும் மூத்த மாமனிதன் #ஷாஹிர்_அப்துல்_ஜப்பார் (Zahir Abdul Jabar) என்ற மண்வாசனை முகநூல் எழுத்தாளன். Facebook வாசகர்கள் இவரை செல்லமாக அழைக்கும் பெயர் சா.நா.

Image may contain: one or more people and indoor#பண்பாட்டு_பாரம்பரிய_அம்சங்களில்_அந்த_ஊருக்கான_நகைச்சுவை_முக்கியத்துவம் பெறுகிறது. மூதூரில் அன்று ஆலமரம், கடற்கரை மணல், வெடி வேட்டை, பௌர்ணமி சமையல் மற்றும் அன்றாட வாழ்க்கை முறையில் #மானிட_பண்புடன் கலந்து காணப்பட்ட ஒரு அம்சமே #மூதூர்_நகைச்சுவைகள். ஆனாலும் காலவோட்டம் மற்றும் நவீனத்துவ ஆர்முடுகல் காரணமாக சில பண்பாட்டியல் கலாச்சாரம் உராய்வுற்று ஊனமனதே மீதம்.

அவ்வாறான அன்றைய (2000 ஆண்டுக்கு முற்பட்ட) #நகைச்சுவையை_ஊரின்_பேச்சு_மொழி_வழக்கில் படைக்கும் தனித்துவ பாங்கு இவரின் (சா.நா) ஒரு விசேட இயல்பு என்று கூறமுடியும். இவரின் #தொடர்_நகைச்சுவை பதிவு பல பொழுதுகள் #ஊரின்_அன்றைய_கால_மக்களின்_வாழ்க்கை_முறை மற்றும் #மானிடவியல்_இடைத்தொடர்பு என்பவற்றை பறைசாற்றி நிற்பது மாத்திரமன்றி அவற்றை பிரதிபலிக்கும் காட்சி ரூபம் அலாதியானதாக பலபொழுதுகள் உணர்ந்துள்ளேன்.
Image may contain: Isar Isar, smiling, text
தனது எழுத்துப்பணியின் மூலம் மண்வாசனை நக்சுவைகளை உலகறியச் செய்யும் பாரிய முயற்சியில் முயற்சித்து வருகின்றார். அவரின் முயற்சிகளிற்குசமூக வலைதள ஆர்வலர்கள் பாரிய வரவேற்பையும் ஆதரவையும் வழங்கி வருகின்றார்கள். உண்மையில் இவ்வாறான முயற்சிகள் மதிக்கத்தகவையோடு அவை பாதுகாத்து ஆவணமாக்கல் செய்யப்படவேண்டிய முக்கிய கருப்பொருளாகும்.
எனவே எவ்வாறானவர்களை வாழ்த்தி ஊக்குவிக்கும் நல்ல உள்ளங்கள் எமது சமூகத்தில் மலிந்து காணப்படுகின்றது என்பதற்கு இந்நூல் சாட்சி.
இவற்றுக்கு மேலேக ஒரு மண்வாசனை இலக்கியம் சமகாலத்தில் புத்தியிர்ப்பு பெறுவது என்பது இந்த நாகரிக உலகத்தில் எழுவது ஒருவகை முன்னேற்றமான விடயமே... என்று கூறி நகைச்சுவைக்குள் நுழைவோம் வாருங்கள்.

ரசிகர்கள் வாழ்த்துமடல்கள்
Image may contain: 1 personImage may contain: 1 person, textImage may contain: 1 person, textImage may contain: 1 person, textImage may contain: 1 person, textImage may contain: textImage may contain: மக்கள் றிப்கான் பாய், textImage may contain: 1 personImage may contain: 1 person, textImage may contain: 1 personImage may contain: Manaseer NathwiImage may contain: Ihshan J.M.I Mohamed, textNo automatic alt text available.No automatic alt text available.Image may contain: Suhaitha Mashoor, smiling

ரசிகை ஒருவரின் வாழ்த்து மடல் 
Image may contain: Suhaitha Mashoor, sky, outdoor and nature
யார் அந்த ஸா நா ?
************.*.*.*.**
முற்றத்து மல்லிகை
 மணப்பதில்லையாம் .
ஆம் உண்மைதான் .
தொலைதூரம் சென்றபின் 
முகநூல் வலம் வந்து 
மூதூர் வாழ் அனைவரையும் 
திரும்பிப் பார்க்க வைத்த 
ஜாம்பவான் .

தன்னைத் தொலைத்த பின்னும் 
ஊரைத்தொலைத்து 
உலக முழுதும் வாழும்
மூதூர் மக்களை 
நட்பினூடே உறவாக்கி 
இணையத்தினூடே இணையச் செய்த
இராஜ தந்திரி .

எல்லா நேரமும் சாத்தியப் படுவதில்லை
மனமகிழ்வும் சிரிப்பும் 
இருந்தும் ஸா நா வின் 
நகைச்சுவை வரும் நாளென்றால் 
தட்டிப்பார்த்து தனிமையில் சிரித்து 
ஆஹா என்று வியக்க வைக்கும் .

மறைந்தவர்கள் மரியாதைக் குரியவர்கள் 
அங்காடிகள் அரசியல் வாதிகள் 
யாரை விட்டு வைத்தார் 
இந்த ஸா நா .

தமிழ்க் கொலையில்லை 
பேச்சுவழக்கிலும் வலைவீசித் தேடியும் 
வார்த்தைகளில் பிழை காணமுடியா 
நுனுக்கமான சொல்லாடல்
வாழ்த்துக்கள் ஸா நா ......

நக்கலிலும் நையாண்டித் தனத்திலும் 
அத்தனை உண்மையை
நாகரிகமாய் சொன்ன விதம்
கற்பனை பண்ணினால் கூட 
இப்படி எழுத முடியாது. 

குத்திக் காட்டுபவர்க்கும் 
குதர்க்கமாய் தட்டிப் பார்ப்பவர்க்கும் 
சலைக்காமல் ஸா நா தரும் 
அதிரடிப் பதில்கள் 
இன்னோர் அசத்தல் தான் .
நம்மூர் மூத்த கலைஞன் 
நகைச்சுவை சிகரம் மட்டுமல்ல 
பாடகனும் மிமிக்கிரியில் விட்பண்னனும் 
இன்னுமின்னும் உங்கள் திறமை 
வெளிக்கொணர வேண்டும் 

இந்த இளைய சந்ததிகள் 
இனங்கண்டு அத்தனையும்
தேர்ந்தெடுத்து நூலுருவாக்கியமை 
பாராட்டுக் குரியதே 
அடுத்தடுத்த சந்ததிக்கும் 
இது ஓர் ஆவணமாய் அமையும் 

வாழ்த்துக்கள் ஸா நா .

மூதூர்
சுஹைதா ஏ கரீம்
வெள்ளவத்தை.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages