Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, October 17, 2018

பிறந்ததும் குழந்தை அழுகின்றது ஏன்? (why baby born crying)

Image result for why baby born cryingபொதுவாக குழந்தைப் பிறப்பு என்பது ஒரு புதிய உலகிற்கு வருகை தருவதற்கு ஒப்பானது. அவ்வாறாயின் பரிட்சயம் இல்லாதா ஒரு சூழலிற்கு புதிய விருந்தாளியின் நடைமுறை இயல்பு எவ்வாறு இருக்கும் என்பது நாம் உணர்வினால் அறிந்த விடயமே. அவ்வாறு குழந்தை பிறப்பை ஒப்புநோக்கினால் எமக்கு இலகுவாக விடை கிடைக்க வாய்ப்புண்டு.

ஓர்  குழந்தையானது சுமார் 120 நாட்களின் பின்னர் கேட்டல் மற்றும் குருதியோட்டம் மற்றும் சில உணர்வுநிலை உணர்ச்சிகளை பெற்றுக்கொள்கின்றது. அந்நிலையில் இருந்து பிறப்பு நடைபெறும் உள்ள காலப்பகுதி வரை சுமார் 6 மாதங்கள் தாயின் கருவறையில் தனக்கென தனித்துவ புறச்சூழல் நிபந்தனையை வாழ்கின்றது. இக்காலப்பகுதியில் வெப்பநிலை, அமுக்கம் மற்றும் புறச்சூழல் ஒலி மற்றும் ஒளி என்பன இயல்பான நிலையில் பழக்கப்பட்டு இசைவாக்கம் பெற்று இருக்கும். அவ்வாறு இசைவாக்கம் பெற்ற ஒரு சூழலில் இருந்து முற்றிலும் மாறுபட்ட புதியதொரு சூழலிற்கு இடமாற்றம் நடைபெறும் தருணத்தை நாம் குழந்தை பிறப்பு என்று அழைப்போம்.
Related image
குழந்தை பிறந்து அடுத்த கணம் குழந்தையில் உடலியல் மற்றும் உளவியல் ரிதியாக பல்வேறு மாற்றங்கள் நிகழும். அவற்றில் குறிப்பாக தானும் தனது வாய் மற்றும் சுவாசத்தொகுதி கருப்பையின் அம்னியோன் பாயியினால் நிரப்பப்பட்டு இருக்கும். இதேவேளை குழந்தை பிறப்பின் பின்னர் அம்னியோன் பாயி மூக்கு மாற்று வாய்ப்பகுதியூடாக வெளியேற்றப்பட்டு நுரையீரல் வெறுமையாகும்.

இதன் பின்னர் சுவாச சீராக்கும் தொடங்கும். பொதுவாகவே சுவாச சீராக்கத்தை புறச்சூழல் நிபந்தனைக்கு ஏற்ப மாற்றி ஒழுங்குபடுத்த குழந்தைக்கு அழுகை மூளை மாற்று நரம்புத்தொகுதியின் தன்னிச்சை செயற்பாடு காரணமாக தூண்டப்படும். வாயை திறந்து குரல்வளை ஊடாக சத்தத்தை எழுப்பி அழுவதால் குழந்தையின் சுவாச சீராக்கும் மறுசீரமைப்பு பெறுகிறது. இவற்றுக்கு மேலாக கீழ்வரும் சில காரணங்கள் அழுகையை மேலும் தூண்டுவதாக அமையும்.

Image result for baby born breath1.  ஒளி மற்றும் ஒலி மாற்றம் சடுதியாக நிகழும். - கருவறை உள்ளே குழந்தையை சூழல் இருள் நிலை சூழலே நிலவும். அத்துடன் குழந்தையானது தொடர்ந்து தாயின் சாந்தமான இதயத்துடிப்பு ஓசையை கேட்டு அதற்கு ஒன்றித்து போய் இருக்கும். அவ்வாறான சூழ்நிலை குழந்தை பிறப்பின் பின்னர் முற்றுமுழுதாக மாற்றமுறும். இதனால் அழும் குழந்தையை நெஞ்சோடு அரவணைக்கும் போது இதய ஓசை கேட்பதனால் குழந்தை அழுகையை ஓரளவு குறைக்கும். அத்துடன் புறச்சூழலில் இருந்து கிடைக்கப்பெறும் ஒலியை குழந்தை கேற்கும் போது இடியோசைக்கு ஒப்பானதாக பெரும் சத்தத்தையும் அதிர்வையும் உணரும். இதன் தாக்கம் குழந்தை அழும்.
2.  அமுக்க மாற்றம் - குழந்தை பிறந்தவுடன் அகச்சூழலில் இருந்து வேறுபட்ட புறச்சூழல் அமுக்கம் குழந்தைக்கு ஒரு தாக்கத்தை உண்டாக்கும். அத்துடன் குழந்தை பிறந்ததும் சிறிய உடல் விரிவு ஒன்று நிகழும். இதுவும் ஒரு காரணமே குழந்தை அழ.
3. வெப்பநிலை மாற்றம் - கருப்பையில் இருந்த குழந்தை தாயின் உடல் வெப்பநிலைக்கு இசைவு பெற்று இருக்கும். ஆனால் பிறப்பின் பின்னர் வெப்பநிலை மாற்றம் நிகழ்வும். இதனால் குழந்தைக்கு அழுகை தூண்டப்படலாம்.
Image result for குழந்தை பிறப்பு4. பசி மற்றும் பயம் - சூழல் மாற்றம் மற்றும் உணர்வுகளின் தூண்டலினால் பயம் மற்றும் பசி தூண்டப்படும். இதனால் தனக்கு தெரிந்த மொழியில் உரையாடும் உரையாடல் அழுகை.
5. பிறப்பு வழியினால் வலி - பிறப்பின் போது குழந்தை தாயின் யோனித்துவாராம் ஊடாகவே வெளிவரும். இதன்போது குழந்தையின் உடல் சற்று ஒடுக்கமுற்ற பாதையூடாக பயணிக்கையில் உடலில் வழியை உணரும். ஆகவே அழுகை தூண்டப்படும்.

கட்டாயம் குழந்தை பிறந்ததும் அழவேண்டுமா?
என்றால் கட்டாய நிபந்தனை ஏதும் இல்லை. சில குழந்தைகள் அழாமலும் பிறக்கத்தான் செய்கின்றது. இவ்வாறான குழந்தைகளில் பெரும்பாலானவை சற்று உடலியல் குறைப்பாட்டை கொண்டதாக அமையும். ஆனாலும் சில குழந்தைகளுக்கு அழுகை தூண்டப்படாத நிலையும் உண்டுதான்.

நீருக்குள் மகற்பேறு (Childbirth in the water)
Image result for Childbirth in the waterசுமார் 30 வருடங்களாக தொடர்ந்து வருகின்ற இந்நடைமுறை குறித்து சற்று பார்ப்போம். மிகவும் அண்மையில் ரஷ்ய விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் அவர்கள் உலகிற்கு குழந்தை பிரசவம் குறித்தான புதியதொரு எண்ணக் கருத்தை முன்வைத்தனர். நீருக்குள் குழந்தை பிறப்பதனால் குழந்தை மட்டுமன்றி தாயும் பல்வேறு வகை நன்மைகளை அடைகின்றனர். மேலும் இது ஒரு ஆரோக்கியமான செயற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைகின்றது.
குழந்தையின் இயல்பு நிலை, சூழல் மற்றும் உடல் நிலை (வெப்பநிலை, அமுக்கம்) என்பன வெகுவாக பேணப்படுகின்றது.
தாயின் உடல் வலி, குருதி அமுக்கம், உடலில் தசைகளின் தளர்வு மற்றும் மயக்கம் என்பன ஏற்படுவது இழிவளவாகின்றது.

சில பொழுதுகளில் இது சாத்தியமில்லாமலும் போகின்றது. அதாவது  உயர் குருதியமுக்கம், நீரிழிவு, இரத்தப்போக்கு மற்றும் நோய்த்தொற்று போன்ற நிலைகளில் பிறக்கவிருக்கும் குழந்தைக்கும் தாய்க்கும் பாதிப்பினை ஏற்படுத்துவதாக  அமையலாம்.
மேலும் இம்முறையானது சிறப்பான பயிற்சி மற்றும் பரிசோதனைகளுக்கு பின்பே நடைமுறை படுத்தப்படுதல் அவசியமாகும். சில வேளை நீரில் ஆபத்தை ஏற்படுத்தும் நுண்ணங்கி மற்றும் ஏனைய இரசாயனம் என்பன கலந்திருப்பின் இது பாரதூரமான விளைவை ஏற்படுத்த வாய்ப்பாகும்.
Image result for Childbirth in the water bookநான் குறிப்பிட்ட நன்மைகளை சுருக்கமாகவே கூறியுள்ளேன். காரணம் தற்போது இத்துறையானது பெருமளவில் மருத்துவத்துறையில் வளர்ந்துவருகின்ற நவீன மருத்துவத்துறை ஆய்வாகும்.
புனித குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.

“பின்பு (அவருக்கு ஏற்பட்ட) பிரசவ வேதனை அவரை ஒரு பேரீத்த மரத்தின்பால் கொண்டு வந்தது: இதற்கு முன்பே நான் இறந்து, முற்றிலும் மறக்கப்பட்டவளாகி இருக்கக் கூடாதா! என்று அரற்றினார். (அப்போது ஜிப்ரீல்) (மர்யமே! நீங்கள்) கவலைப்படாதீர்கள்! உமது இறைவன் நிச்சயமாக உமக்கு கீழாலேயே ஒரு (நீர்) ஊற்றை உண்டாக்கி இருக்கின்றான் என்று அவர் அழைத்து கூறினார்.” (அல்-குர்ஆன் 19:23~24)

பிரசவ வேதனையினை தாங்க முடியாத ஓர் பெண்ணின் நிலைமையினை விபரிக்கும் குர்ஆன் அவளுக்கு ஆதரவாக “உமக்கு காலுக்கு கீழாலேயே ஒரு ஊற்றை உண்டாக்கினோம்” என்று கூறுவதன் நோக்கம் மிகவும் ஆச்சரியமாக அமைகிறது. ஆனால் மேலுள்ள அறிவியலை ஒப்பாய்வு செய்வோமானால் இவ்வசனத்தின் பின்னணி புலனாகும்.

எது எவ்வாறோ குழந்தை பிறப்பின் அழுகை என்பது கடினமான சூழலிற்கு வாழ இருப்பதை உணர்த்தும் ஒரு சமிஞ்சை என்றும் கூறலாம்.
"குழந்தை அழுவதை பார்த்து தாய் சிரிக்கும் தருணம் குழந்தை பிறப்பு ஓன்றே"  (அப்துல் கலாம்)

தேடல் வலைத்தளங்கள் 
https://www.sciencefocus.com/the-human-body/why-do-newborn-babies-cry/
https://www.lifealth.com/pregnancy-and-parenting/new-born-babycare/why-do-baby-cry-right-after-the-birth-sd/32010/
https://biology.stackexchange.com/questions/55014/why-babies-cry-after-they-are-born
https://www.babycentre.co.uk/a25005123/first-24-hours-newborn-crying
https://www.quora.com/Why-do-babies-cry-soon-after-they-are-delivered-What-is-the-scientific-reason-behind-it
https://www.quora.com/What-if-a-baby-does-not-cry-at-the-time-of-birth
நீருக்குள் மகற்பேறு 
http://americanpregnancy.org/labor-and-birth/water-birth/
https://www.webmd.com/baby/water-birth
https://www.babycentre.co.uk/a542005/what-the-research-says-about-water-birth

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages