Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Tuesday, October 2, 2018

வேற்றுக்கிரக வாசிகளும் மானிட வாழ்கையும் (Aliens and Humans)

Related imageவேற்றுக்கிரகவாசிகள் பற்றி சுமார் அரை நூற்றாண்டுகள் மேலாக அறிவியல் உலகில் பேசப்பட்டு வருகின்றது. இதற்கு மேலாக திரைப்பட உலகில் வெவ்வேறு கற்பனை மற்றும் கதாப்பத்திரங்களை அடிப்படையாக்கொண்டு தனித்துவ அடையலாம் ஒன்றையும் வேற்றுகிரக உயிரினம் இந்த நீள கிரகத்தில் பதித்துள்ளது. எவ்வளவிதான் அதி நவீனத்துவ சாதனங்கள் கண்டறியப்பட்டாலும் வேற்றுக்கிரக உயிரினம் பற்றிய குழப்பம் இன்றளவும் நிலவி வருவதுடன் அது தீர்ந்த பாடும் இல்லைதான்.
Image result for alienவேற்றுக்கிரக வாசிகள் என்றால் யார்? 
பிரபஞ்சம் முழுவதும் கோடான கோடி கிரகங்கள் இருக்கின்ற வேளையில் பூமியில் மாத்திரம்தான உயிரினங்கள் நிலைபேறு பெற்றுள்ளது என்ற ஐயம் உங்களுக்கு ஏற்படுமாயின் அந்த ஐயத்தை நிவர்த்திக்க உண்டான வழிமுறை வேற்றுக்கிரக உயிரினங்கள்.
அதாவது பூமி அல்லாத வேறு கிரகத்தில் உயிர்வாழும் ஒரு உயிரினம் மனிதனுக்கு சொந்தமான இந்த பூமிக்கு வருமாயின் அது ஒரு அந்நிய உயிரினம். அந்த அந்நிய உயிரினம் வேற்றுகிரக வாசிகள் என்று எளிமை வடிவில் அழைக்கின்றோம்.
Image result for alienபூமியில் இருந்து அதன் துணைக்கோளான சந்திரனுக்கு செல்லவே இவ்வளவு கடினமாக உள்ளபோது எவ்வாறு ஒரு கிரகத்தில் இருந்து மறு கிரகத்திற்கு வேற்றுக்கிரக வாசிகளினால் பயணிக்க முடிகின்றது என்ற கேள்வி பரவலாக உள்ளது. இதற்கு பதிலாக வேற்றுக்கிரக வாசிகளை நம்பும் எம்மவர்கள் எளிமையாக அவர்களின் தொழிநுட்ப அறிவு என்று விடை கூறிவிடுகின்றார்கள். உண்மையில் தர்கவியல் ரீதியாக இதனை ஆராய்விற்கு உற்படுத்துகையில் உங்களுக்கே பதில் கிடைக்கும் அவ்வளவிற்கு அது சாத்தியம் இல்லை என்று... சரி அவர்கள் நம்புவது போலவே இருக்கட்டும். நாம் முரண்பாட்டு அணுகுமுறையை விட்டு உடன்பாட்டு அணுகுமுறையில் எமது தேடலை தொடர்வோம்.

இன்றுவரை இதற்கான ஆதாரங்கள் உள்ளனவா???? ஆம்
Image result for ancient cave home
Image result for pyramidபூமிக்கும் வேற்றுக்கிரக உயிரினத்திற்கும் நாகரீக காலம் தொட்டும் பாரிய உறவுமுறை இருந்துள்ளதனை வரலாற்று ஆதாரங்களை கொண்டு நிரூபிக்க முயல்கின்றார்கள். அதற்கு இவர்கள் உதாரணம் காட்டும் முக்கிய சான்றுகள் பிரமிடுகள், மலைகளில் தோற்றுவிக்கப்பட்ட பாரிய குகை மற்றும் சில அமானுஷ்ய செயற்பாடுகள்.
Image result for mayan pyramidபூமியில் மனித மற்றும் விலங்கு உயிரினங்களுக்கு அப்பால் சக்திவாய்ந்த பல்வேறு படைப்புக்கள் உலாவருகின்றதுதான். அவற்றை குறித்து அறிவியல் உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளா விட்டாலும் அவற்றை முழுமையாக மறுக்கவில்லை. காரணம் பூமியில் அவ்வாறான படைப்புக்கள் மனிதனோடு பின்னிப்பிணைந்து வாழ்த்து வருகின்றதே என்பதே உண்மை.

இல்லாத ஒன்றை தோற்றுவித்தல்.... 
அறிவியல் உலகில் பல்வேறு மாயைகள் நிறைந்து காணப்படும். இதற்கான காரணம் ஆய்வு தொக்கி நிக்கும் நிலையாகும். இதனை தாண்டி உலகில் ஒரு செயற்பாட்டை மூடி மறைக்கவும் தாங்கலை காத்துக்கொள்ளவும் பல்வேறு கற்பனை கதாப்பாத்திரங்கள் ஆதிக்கம் கூடிய மனித வர்க்கங்களுக்கு தேவைப்படாக வரலாற்று நெடுகிலும் தேவைப்பட்டு வந்துள்ளது. இவ்வாறான சந்தர்பங்களில் பாதிப்புற்ற மனிதர்களின் தேடல் ஆய்வு என்பன பல மாயைகளின் முகத்திரையை கிழிக்க வாய்பாகியது.
Image result for aliens and nasa
அவ்வாறான சூழ்நிலையின் போது சமகால சூழலில் பல்வேறு அத்துமீறல் செயற்பாடுகள் மற்றும் ஒரு நாட்டின்மீது பாதுகாப்பு உளவு நோக்கு மற்றும் வேறு சில காரணங்களுக்கு ஒரு மாயை கதாப்பாத்திரம் வல்லரசு நாடுகளுக்கு தேவைப்பட்டது. அதன் தாக்கம் தொழில்நுட்ப அறிவில் அறியமுடியாத ஒன்றை தோற்றுவித்தல். இவ்வாறு தோற்றுவிக்கப்பட்ட கதாப்பத்திரமே வேற்றுகிரகவாசிகள். ஆனாலும் விண்ணியல் அறிஞ்சர்கள் மற்றும் விஞ்ஞானிகள் தங்களின் ஆய்வை முடிவுக்கு கொண்டுவரும் நிலைப்படும் இல்லை.

இஸ்லாத்தின் பார்வையில் 
Image result for adam and evalகீழே எடுத்துக்காட்டப்படும் அல்குர்ஆன் வசனங்களை கொண்டு எனது கருத்தை பதிவு செய்ய முற்படுகின்றேன்.
"ஷைத்தான் அவர்கள் இருவரையும் அதிலிருந்து வழி தவறச் செய்தான்; அவர்கள் இருவரும் இருந்த(சொர்க்கத்)திலிருந்து வெளியேறுமாறு செய்தான்; இன்னும் நாம், “நீங்கள் (யாவரும் இங்கிருந்து) இறங்குங்கள்; உங்களில் சிலர் சிலருக்கு பகைவராக இருப்பீர்கள்; பூமியில் ஒரு குறிப்பிட்ட காலம் வரை உங்களுக்குத் தங்குமிடமும் அனுபவிக்கும் பொருள்களும் உண்டு” என்று கூறினோம்" (அல்குர்ஆன் 2:36, 7:24)

“நிச்சயமாக நான் பூமியில் ஒரு பிரதிநிதியை அமைக்கப் போகிறேன்” என்று கூறியபோது, அவர்கள் “(இறைவா!) நீ அதில் குழப்பத்தை உண்டாக்கி, இரத்தம் சிந்துவோரையா அமைக்கப்போகிறாய்? இன்னும் நாங்களோ உன் புகழ் ஓதியவர்களாக உன்னைத் துதித்து, உன் பரிசுத்ததைப் போற்றியவர்களாக இருக்கின்றோம் என்று கூறினார்கள்; அ(தற்கு இறை)வன் “நீங்கள் அறியாதவற்றையெல்லாம் நிச்சயமாக நான் அறிவேன்” (அல்குர்ஆன் 2:30)

(மனிதர்களே!) நிச்சயமாக நாம் உங்களை பூமியில் வசிக்கச் செய்தோம்; அதில் உங்களுக்கு வாழ்க்கை வசதிகளையும் ஆக்கித்தந்தோம் (அல்குர்ஆன் 70:10)
Image result for human world"உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத எந்த உயிரினமும் பூமியில் இல்லை; மேலும் அவை வாழும் இடத்தையும் (இருக்கும்) இடத்தையும், அவை (மடிந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிகிறான்" (அல்குர்ஆன் 11:6)
“பூமியில் மலக்குகளே வசித்து (இருந்து அதில்) அவர்களே நிம்மதியாக நடமாடிக் கொண்டிருந்தால், நிச்சயமாக நாம் அவர்களிடம் ஒரு மலக்கையே வானத்திலிருந்து (நம்) தூதராக இறக்கியிருப்போம்” (அல்குர்ஆன் 17:95)
“ஆண்டுகளின் எண்ணிக்கையில் நீங்கள் பூமியில் எவ்வளவு (காலம்) இருந்தீர்கள்?” (அல்குர்ஆன் 23:112)

மேற்படி எல்லா வசனங்களிலும் மொத்த பிரபஞ்சத்தில் பூமியை மாத்திரமே இறைவன் சுட்டிக்கட்டுகின்றான். இதற்கான காரணம் பூமியில் மாத்திரமே உயிரின வாழ்க்கை தொடர்கின்றது என்ற ஒரே காரணத்தினால் தான். இன்னும் சற்று ஆழமாக நோக்கும் போது மொத்த பிரபஞ்சத்தின் உருவாக்கம் என்பது மனிதனின் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளிக்கவும் இன்னும் மனிதனின் இயலாமையை அவனுக்கு விபரிக்கவுமே ஆகும். வானங்கள், பூமி ஆகியவற்றின் படைப்பைப் பற்றியும் சிந்திக்கவே.
Image result for universe
அவ்வாறாயின் கண்டே பிடிக்கப்படாத கிரகங்களின் பயன்பாடுதான் என்ன???  
சுமார் இரு நூற்றாண்டுகள் முன்னர் உள்ள அறிவியல் அறிவை கொண்டு நாம் எதனை சாத்தியம் இல்லை என்று கூறினோமோ அவை இன்று சாத்தியமாகி உள்ளபோது இன்னும் இரு நூற்றாண்டுகள் முன்னோக்கி சென்றால் எமக்கு எது தென்படவில்லையோ அவைகள் அன்றுள்ள சமூகத்திற்கு தென்பட வாய்ப்புள்ளது தானே????

“எங்கள் இறைவனே! இவற்றையெல்லாம் நீ வீணாகப் படைக்கவில்லை" (அல்குர்ஆன் 3:191)
சுருக்கமாக கூறினால் வேற்றுக்கிரகவாசிகள் என்று கூறுவது மனிதன் தவிர்ந்த ஏனைய படைப்பான ஜின்கலையே.... 

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages