Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, August 5, 2018

மனித உருவாக்கப் படிநிலை - STAGE OF THE HUMAN CREATION - 2

Related imageதொடர் - II 
“நாம் நிச்சயமாக உங்களை (முதலில்) மண் ணிலிருந்தும் பின்னர் இந்திரியத்திலிருந்தும், பின்பு அலக்கிலிருந்தும்; பின்பு (அவன்) உருவாக்கப்பட்டதும், உருவாக்கப்படாததுமான தசைக் கட்டியிலிருந்தும் படைத்தோம்; உங்களுக்கு விளக்குவதற்காகவே (இதனை விவரிக்கிறோம்): நாம் நாடியவற்றை ஒரு குறிப்பிட்ட காலம் வரை கருப்பப்பையில் தங்கச் செய்கிறோம்; பின்னர் உங்களை (நாம்தான்) குழந்தையாக வெளிப் படுத்துகிறோம்” (அல்-குர்ஆன் 22:5, 23:13~14)

நிலை II - நுகத்திலிருந்து (கலப்பு இந்திரியம்) மனித உருவாக்கம்
Image result for zygoteகருவின் வளர்ச்சி குறித்து புனித அல்-குர்ஆன் பேசும் இரண்டாவது கட்டம் இதுவாகும். 
“(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனை படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் நாமே ஆக்கினோம்” (அல்-குர்ஆன் 76:2)

Image result for Morulaகருக்கட்டல் (Fertility) என்றழைக்கப்படுவது ஆணின் விந்தணுவின் கருவானது பெண்ணின் சூல் கலத்தின் கருவுடன் இணைவுருவதாகும். இவ்வாறு இணைந்து உருவாகும் இருமடியக் கலம் (Diplont cell) நுகம் (Zygote) என்றழைக்கப்படும். இத்தனிக்கலம் ஆனது தாயினதும் தந்தையினதும் DNA பாகங்களைக் கொண்டதாகும். நுகம் எனப்படும் கருவுற்ற தனிக்கல அமைப்பினையே புனித அல்-குர்ஆன் “நுத்ஃபதுன் அம்சாஜ்” (கலப்படைந்த இந்திரியம்) எனப்படும் வார்த்தையை கையாள்கிறது. 
நுகத்தின் கலப்பிரிவு காரணமாக தனிக்கல அமைப்பு பல் கலம் கொண்ட அமைப்பாக மாறும். இதனை நாம் முசுவுரு (Morula) என்றழைக்கின்றோம். இந்நிலையில் காணப்படும் முசுவுரு தொடர்ச்சியாக கலப்பெருக்கம் அடைந்து வளர்ச்சியுருவதன் மூலமாக  கருவளர்ச்சியின் அடுத்தகட்ட படிநிலையை எட்டும். முசுவுரு நிலை கருவுற்ற நான்காம் நாள் (Day 4) இல் தோற்றம் பெரும் ஓர் கலக்கட்டமைப்பாகும். 

நிலை III - “அலக்” நிலையிலிருந்து தோற்றம்பெறல் 
அலக் நிலை எனப்படுவது கருவளர்ச்சியின் மூன்றாவது படிநிலையாகும். மானிடக் கரு வளர்ச்சி சம்மந்தமாக நவீனகால மருத்துவம் மிக அண்மையில் இதுபற்றிய கருத்தை வெளியிட்டுள்ளது. 
 “அலக்” எனப்படும் அரபிய வார்த்தையினை நிலை IIIஆம் கட்டத்தில் குர்ஆன் பயன்படுத்துகின்றது. அலக் என்பது அரபியில் முவ்வகை வெவ்வேறுபட்ட கருத்துக்களைக் கொண்டதாக  அமைந்துள்ளது. 
I. இரத்தக் கட்டி (Blood clot)
II. அட்டை (Leech)
III. தொங்கக் கூடிய ஒரு வகையான பொருள் (Suspended thing) 

இரத்தக் கட்டி (Blood clot)
மனித கரு வளர்ச்சிக் கட்டத்தில் இந்நிலைமை கருவுற்ற பின்னர் ஆறாம் தினத்தில் (Day 6) தோற்றம் பெறுகின்ற கட்டமைப்பாகும். கருவளர்ச்சியின் போது இக்காலப்பகுதியில் கலங்களின் எண்ணிக்கை சற்று இழக்கப்பட்ட பாயி நிறைந்த ஒரு கட்டமைப்பாக காட்சியளிக்கும். 
Image result for Morulaஇக்கட்டமைப்பினை ஆய்வுகூடக் கருவி கொண்டு அவதானிப்பின் உறைந்த இரத்தக் கட்டியின் அமைப் பினை ஒத்ததாக காணப்படும். இக்குறித்த அமைப்பை நாம் பிளாஸ்டோசிஸ்ட் (Blastocyst) என்றும் அழைப்போம். இக்கட்டமைப்பு மேற்குறிப்பிட்ட அலக் எனப்படும்  நிலைக்கு ஒரு உதாரணமாகும். அத்துடன் பிளாஸ்டோசிஸ்டிலுள்ள கலங்களை உள்ளடங்கிய தொகுதியை கலப்பிண்டமென மருத்துவம் அழைக்கின்றது. இது பூரண மனிதனுக்கு தேவையான தலை, உடல், என்பு மற்றும் பிற உடலியல் சார் அமைப்புகளை அளிக்கும் வல்லமை கொண்டதாகும். 

தொடர்ந்தும் கருப்பையினை நோக்கி நகரும் பிளாஸ்டோசிஸ்ட் ஆனது தாயின் கருப்பை உட்சுவரில் தன்னைப் பதித்துக்கொள்கின்றது. இது முளைய   உட்பதித்தல் (Implantation) எனப்படும். இச்செயன் முறைகள் யாவும் கருவுற்ற ஆறாம் தினம் தொடங்கி 10 முதல் 14 நாட்களுக்குள் நிறைவு பெறுகின்றது. 

அட்டை (Leech)
Image result for Leech fetas3 முதல் 4 வாரங்களுக்குள், உடல் அமைப்பு உருவாகி மூளை, முதுகந்தண்டு மற்றும் மூலவுருவின் இதயம் ஆகியவை உருவாகி தாயின் கரு உறையை ஒட்டியவாறு காணப்படும். இவ்வமைப்பானது தனக்கு தேவையான போசணையை கருப்பைச் சுவரிலிருந்து பெற்றுக் கொள்கின்றது. உதாரணமாக “இரத்தத்தை உறிஞ்சும் அட்டை ஒன்றின் செயற்பாட்டிற்கு ஒப்பாக” மேற்படி கட்டமைப்பு அமையும். இக்குறித்த காலப்பகுதியில் முளையத்தின் அமைப்பு அட்டையின் புறத்தோற்றவியல் அமைப்பை ஒன்றித்துக் காணப்படும். குர்ஆன் கூறும் கருவியல் பற்றிய சில வசனங்கள் பேராசிரியர் டாக்டர் கீத் மூர் அவர்களிடம் கொடுக்கப்பட்டது. 
Related image
கீத் மூர் அவர்களிடம் அல்-குர்ஆனிலிருந்து கொடுக்கப்பட்ட வசனங்களை வாசித்த பின்னர்; அவர் ஆய்வுகூடத்தில் கருவளர்ச்சியின் குறித்த கட்டத்தை ஆய்வுகூடக் கருவிகள் கொண்டு அவதானித்த போது மலைத்து நின்றுகொண்டு இருந்தார். காரணம் கடந்த முப்பது வருடங்களாக ஆய்வை மேற்கொண்டுவந்த அவரே இந்நிலை பற்றி தெளிவாக அறிந்திருக்கவில்லை. கீத் மூர் அவதானித்த மானிட முளையம் மற்றும் லீச் அட்டையின் அமைப்பு கீழ் உருவமைப்பில் காட்டப்பட்டுள்ளது.

மேலும் இக்காலப்பகுதியில் அட்டை மற்றும் மனித முளையத்தின் தலைப்பகுதிகள் இரண்டும் மிக வியப்புக்குரிய வகையில் பொருந்துகின்றதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. 

தொங்கும் பொருள் (Suspended thing)
இந்நிலைமை கருவளர்ச்சிக் கட்டத்தில் சுமார் 4~8 வார காலப்பகுதியில் காணப்படும் நிலையாகும். தொடர்ந்து கருப்பையில் பதிக்கப்பட்ட முளையத்தை சூழ்ந்து சூல்வித்தகம் (placenta) தோற்றுவிக்கப்படும்.
Related imageசூல்வித்தகம் தாய், குழந்தை தொடர்புகளை ஏற்படுத்தும். இதிலிருந்தே தொப்புள் கொடி (Cordon Umbilical) உருவாகும். பாயி நிறைத்த (Amniotic fluid) பையினுள் முளையமானது தொங்கிய நிலையில் தொப்புள் கொடியின் மூலமாக இணைக்கப்பட்டும் காணப்படும். இதனால் பார்ப்பதற்கு “தொங்கும் பொருளாக இது காட்சியளிக்கும்.” “அலக்” எனும் சொல்லுக்கு குர்ஆனில் பயன்படுத்தப்பட்ட 3ஆவது கருத்து இது. மேலும் தொப்புள் கொடியானது தாயினதும் குழந்தை யினதும் பதார்த்தக் கடத்தலுக்கு உதவி புரியும். 
Image result for human Embryonic membranes
இக்காலப்பகுதியில் முளையத்தை சூழ்ந்தவாறு மூன்று படையில் முளைய மென்சவ்வுகள் (Embryonic membranes) தோற்றம் பெற்றுக்காணப்படும். உண்மையில் மனிதனின் முளைய விருத்திப் படியின் ஆரம்ப காலப்பகுதியில் தோற்றம் பெறும் புறத்தோற்றக் கட்டமைப்புக்களை பற்றி அல்-குர்ஆன் கூறும் நிலைகளை விபரிக்கும் அரபு வார்த்தையே “அலக்” என்பதாகும். குர்ஆனிய மொழிநடை மிகவும் ஆச்சரியமாக உங்களுக்குத் தோன்றவில்லையா? 

மேற்கூறப்பட்ட “அலக்” என்ற அல்குர்ஆனிய சொல்லுக்கான அர்த்தம் கருவளர்ச்சியின் ஒவ்வொரு கட்டத்துக்கும் மிகப்பொருத்தமாக பொருந்துவதை எம்மால் அவதானிக்க முடிகின்றது. அல்-குர்ஆன் பயன்படுத்திய வார்த்தை வர்ணனைகள் எமக்கு ஆச்சரியமானதாக  தோன்றவில்லையா? 

இதுபற்றி புனிதமிக்க திருமறை குர்ஆன் மிக எளியதொரு வசனத்தில் கீழ்வருமாறு கூறுகின்றது. “பின்னர் அலக் என்ற நிலையிலிருந்து மனிதனை (அல்லாஹ்தான்) படைத்தான்” (அல்-குர்ஆன் 96:2)

முன்னைய தொடர் 
http://www.mutur-jmi.com/2018/07/stage-of-human-creation.html

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages