
பிராமணன் தலையில் பிறந்தான்; சத்திரியன் தோளில் பிறந்தான்; வைஷியன் தொடையில் பிறந்தான்; சூத்திரன் பாதத்தில் பிறந்தான்! - இப்படித்தான் சமஸ்கிருதம் தெரியாத சில அரை குறைகள்சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டி எலும்புகளைக் கவ்விக் கொண்டிருக்கிறது:
உண்மைகளை எளிதில் மறைத்துவிட முடியாது. சமஸ்கிருதம் தெரியாமலேயே நீங்கள் சமஸ்கிருத ஸ்லோகத்துக்கு அர்த்தம் புகட்டிவிடும் போது. சமஸ்கிருதம் அறிந்த எங்களால் வார்த்தை அர்த்தம் சொல்லிவிட முடியும்.
புருஷ சூக்த்தத்தில் வரும் ஸ்லோகம் இதுதான்:
****************************************************
”பிராமணஸ்ய முகமாஸீத், பாஹூ ராஜன்ய: க்ருத:
ஊரு ததஸ்ய யத்வைஸ்ய:,பத்ப்யாகும் சூத்ரோ அஜாயத” (ரிக் வேதம் 10-90-12)
வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம்:
************************************

பிராமணஸ்ய - பிராமணன் உடைய;
முகமாஸீத் - முகமானது பிரகாசமாய் இருத்தல்;
பாஹீ - தோள்கள் வலிமையாக
ராஜான்ய - சத்திரியர்கள்
க்ருத - மத்திய
ஊரு - தொடை
ததஸ்ய - தத்துவம் நிறைந்த
யத் வைஷிய - இந்த வைஷியர்கள்
பத்ப்யாகும் - பாதமாக
சூத்திரோ - சூத்திரன்
அஜாயத் - வலிமைமிகுந்தவனாக (ஆஜானபாகு).
ஸ்லோகத்தின் பொருள்:
***************************
வேதம் நல்லொழுக்கம் நீதி இவற்றை புகட்டுபன பிராமணன், அப்பேர்பட்டவன் முகமானது ஞானம் பெருகி தேஜசாக இருத்தல் வேண்டும், அதாவது பார்வையில் நேர்மை, எண்ணத்தில் தூய்மை, வாயில் வாய்மை பொருந்தியவனாக இருத்தல் வேண்டும். பிரம்ம தேவரின் முகத்தை ஒத்து இருத்தல் வேண்டும்.
இராஜாங்கத்தைக் கட்டிக்காக்கும் ஒரு சத்திரியன் தோளானது பிரம்மதேவரின் தோள் போல வலிமையானதாக இருத்தல் வேண்டும். அப்போதுதான் அவனால் போர்களையில் சிறந்து விளங்கி தனது குடிகளை திறம்பட காத்திட முடியும்.
வைஷியனாவன் பொருளை ஈட்டும் போது பிறர் வயிற்றிர்க்கு வஞ்சனை அளிக்காமல் வியாபாரத்தில் நேர்மையானவனாக நல்ல தீர்க்கமாக வலிமையான துடை கொண்டு அமர்ந்து சிந்தித்து நேர்மையான வாணிபத்தில் ஈடுபட வேண்டும்.
சூத்திரனானவன் வயல்களில் பாடுபட்டு, இந்த லோக உயிர்களுக்கு பசியாற்ற பாடுபட வேண்டும் அத?ற்கு அவனுக்கு வலிமையான பாதங்கள் வேண்டும். சோர்வில்லாத பாதங்கள் வேண்டும்.
இதில் பிறப்பு என்ற சொல் எங்கே வந்தது?
**********************************************
அடியேன் மேலே குறிப்பிட்ட ஸ்லோகத்தில் பிறப்பு என்ற வார்த்தை எங்கே வந்தது? வாய்க்கு வந்தார் போல் அர்த்தம் புகட்டிவிட்டு முட்டாள் மாணவனாக இருந்து விட்டு ஆசிரியரை குறை சொல்லி என்ன பயன்.

பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்:
*************************************************
பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மம் சொல்கிறது. அதற்கான ஸ்லோகம்,
“ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே”
அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே, தொழிலினால்தான் இரு பிறப்பாளராகின்றனர் (துவீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது.
இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது:
************************************************
ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இருபிரப்பாளனாக; ஜாயதே - பிறப்பாளன் ஆகிறான்.
மேலே குறிப்பிட்ட ரிக் வேதத்தின் புருஷ சூக்த்தத்தில் ஜ, ஜா என்னும் வார்த்தைகள் எங்காவது காண முடிகிறதா?
இதற்கு மேலும் விளக்கம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்று கருதுகிறேன்.
மற்றைய மதங்களில் சொல்லபட்ட மத நூட்களில் உள்ள குறைகளை விமர்சிக்க தினவு இல்லா பகுத்தறிவு பண்ணாடைகள் முதுகெலும்பு இல்லா விலங்குகள் நம் சனாதன தர்மத்தவர்களின் நம்பிக்கையின் மீது மட்டும் ஏன் தன் சாக்கடை ஓடும் மண்டையை பயன்படுத்தி விமர்சனம் செய்கிறார்கள்?
ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் நீங்கள் விமர்சனம் செய்யமுடியாத உன்னத இடத்தில் சைவ மக்கள் நிற்கிறார்கள்
உடையில், நாகரீகத்தில், மருத்துவத்தில், யோகசாஸ்திரத்தில்,வான சாஸ்திரத்தில் ,யுத்தசாஸ்திரத்தில்,தனிமனித சுதந்திரத்தில்,வழிபாட்டில்,தேச பக்தியில், என அத்துனையிலும் எம்மக்கள் உலகம் வியக்கும் விக்ஞானத்தின் உச்சியில்
உங்களை விட 100000000 மடங்கு உசத்தி நாங்கள் அனைத்திலும்
கருமையின் அடையாலமே கருணைக்கு அடையால மக்கள் பொருப்பர் சில காலம்
சாது மிரன்டால்? ??????
எனவே நா காக்க
No comments:
Post a Comment