Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, August 18, 2018

ஜும்மாக்கள் சுமாக்கள் ஆனதன் காரணம் என்ன????

Image result for speechஜும்மா தலைப்புக்கள் மறைக்கவும், மறுக்கவும், மறக்கவும் செய்ய மாயம் தான் என்ன என்று எப்போதாவது சிந்தித்து பார்த்ததுண்டா.... 
பன்முகப்படுத்தப்படவேண்டிய பல இஸ்லாமிய சட்டவியல் சார்ந்த அணுகுமுறை ஜும்மா மேடைகளில் சும்மா புறக்கணிக்கப்பட்டு ஓரங்கட்டப்பட காரணம் பற்றி ஆராய்கையில் சற்று கசப்பான விடயங்கள் கிடைகப்பெருகின்றது. அவை பற்றி நாளை பேசுவோம். பலர் பாதிப்புற காரணமாகிவிடும்.
சரி தலைப்பிற்கு வருவோம்...
எந்தவொரு சமயத்திலும் இல்லாத பல ஒன்றுகூடல் ஒழுக்க மற்றும் ஒழுங்கு முறைமையைகள் இஸ்லாத்தில் காணப்படுகின்றபோதும் அவைகள் முறையாக பயன்படுத்தப்படுகின்றதா என்பதில் சற்று சந்தேகம் நிலவவே செய்கின்றது. ஐவேளை தொழுகை தொடக்கம் ஐந்தாம் கடமையான ஹஜ் வரைக்கும் எதவித அறிவிப்பும் இன்றி நேரம் வந்தவுடன் ப்ரோகிராம் செய்யப்பட ரோபோக்கள் போல முஸ்லிம்கள் குறிப்பாக முஃமீன்கள் இயங்குவது ஒருவகை ஆச்சரியம் தான். ஆனால் அவர்களின் இயக்கத்திற்கான நோக்கம் பல பொழுதுகள் திருப்தி அளிக்காமலே போகின்றமை கவலைக்குரிய விடயம்.
அந்தவகையில் வாரம் தோறும் வெள்ளிக்கிழமை ஜும்மா பிரசங்கத்திற்கு ஏதாவது ஒன்றை புதிதாக கற்கவேண்டும் என்று பல மாணவர்கள் பள்ளிவாசலுக்கு நேரகாலத்துடன் செல்வார்கள் அதில் நானும் ஒருவன். அல்ஹம்துலில்லாஹ்
அநேகமான சந்தர்ப்பங்கள் பேசப்பட்ட தலைப்புக்கள் பேசப்பட்டு ஒருவகை சலிப்பை உண்டாக்குவது மாத்திரமன்றி ஏதோ சந்தர்பம் கிடைத்துவிட்டது என்று பெறுமதியான நேரத்தை காலம் கடத்தும் பல மேடைகளை எனது வாழ்வில் அதிகம் சந்தித்து உள்ளேன். ஆனாலும் எனது எதிர்பார்ப்புக்கள் அவ்வப்போது நிறைவேறுவது மனதிற்கு திருப்தியை அளிக்கின்றது.
Related imageஇருந்தபோதும் பல்வேறு தலைப்புக்கள் பற்றி பொடுபோக்கா அழைப்பாளர்கள் கவனம் செலுத்தவில்லை என்று உறுதியாக கூறுவேன்.
1. திருமணம், பலதார திருமணம், இளம் வயது திருமணம் - இதில் தொடர்ந்து மேலோட்டமாக தொட்டுசெல்லும் முறை காணப்படுகின்றது. இதனாலோ தெரியவில்லை சமகாலத்தில் அதிக குடும்பங்கள் சீரழிய காரணமாகியது மட்டுமன்றி விபச்சாரம் மலிந்துள்ளது
2. நவீன காலத்து கொடுக்கல் வாங்கல் முறைமை - தொடர்ந்து வட்டியும் அளவை நிறுவியும் பற்றி நுனிப்புல் மேச்சல். நவீனகாலத்தில் பரிணாமம் பெற்ற வட்டி முறை மற்றும் வியாபர மோசடி பற்றி பேசப்படவில்லை)
3. கட்டிளமை பருவ மாற்றங்கள் மற்றும் உடலியல் உளவியல் மற்றும் சமூகவியல் தாக்கம் பற்றியும் ஆளிடை தொடர்பு பற்றி பேசப்படவில்லை.
4. சுய இன்பம் (masturbation), ஓரினச்சேர்க்கை (Homo sex- gays & lesbianism) - அதிகம் அதிகம் பேசப்பட வேண்டிய முக்கிய தலைப்பு. அதிகம் ஆண்கள் என்றுதான் இதுவரை நினைத்து இருந்தேன். ஆனால் பெண்களின் சதவீதம் சடுதியாக அதிகரித்து வருவதாக அண்மைய ஆய்வுகள் கூறுகிறது.
5. தலாக் (மணவிலக்கு) பற்றி அறவே தெளிவூட்டியது கிடையாது – சமகாலத்தில் அதிகம் நினைவூட்டப்படவேண்டிய ஒரு தலைப்பு ஆனால் மேடைகளில் ????
6. மரண சாசனம் மற்றும் சொத்து பங்கீடு – சொல்லவே தேவையில்லை. அவர்களுக்கு தெரிந்தால் தானே சொல்ல என்று பலர் கூற நான் கேட்டுள்ளேன்.
7. பள்ளிவாயல் நிர்வாகம் மற்றும் பள்ளிவாசல் நடைமுறை
8. கூட்டு கடமைகள் பற்றி – சகாத், உல்ஹியா
9. இஸ்லாமிய கல்வி முறை 
Related image10. இஸ்லாமிய பார்வையில் குடும்பக்கட்டுப்பாடு 
சமூக வலைத்தளங்களில் முட்டைகளுக்கும் மூட்டைகளுக்கும் ஒருவரை ஒருவர் விமர்சனங்கள் செய்வதை சிந்திக்கவும் ஆதாரம் தேடவும் முயற்சிக்கும் தாயிக்கள் இவற்றை பற்றி சற்று கவனம் செலுத்துங்கள். அடித்தளத்தை முதலில் சரி செய்ய முயற்சிக்க பலர் முன்வருவதில்லை என்பதுதான் சமூகத்தின் பாரிய பின்னடைவிற்கு காரணமாகியுள்ளது.
குறிப்பு – சமூகத்தில் பாரிய தாக்கத்தை மேற்படி தலைப்பு செல்வாக்கு செலுத்துகின்றது. நானும் கற்க விரும்பியே மேற்படி தலைப்புக்களை பதிவேற்றம் செய்துள்ளேன்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages