Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Sunday, June 3, 2018

பத்ர் களமும் கல்வியல் பகுத்தறிவும்....

Image result for புராதன போர்"இதையும் நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ் உங்களைச் சிற்றுறக்கம் கொள்ளச் செய்து தன் சார்பிலிருந்து உங்களுக்கு மன நிம்மதியையும் அச்சமின்மையையும் ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்திலிருந்து உங்கள் மீது சிறு மழையையும் பொழியச் செய்தான்" (அல்குர்ஆன் 8:11, 3:154)

மேற்படி வசனம் முஸ்லிம்களின் ஒரு சிறு கூட்டம் முஸ்லிம்களை அழிக்க எத்தனித்த பெரும் கூட்டத்தை யுத்த களத்தில் சந்தித்த வேளையில் நடைபெற்ற சம்பவத்தை சுட்டிக்காட்டி அமைகின்றது.

அதாவது முஸ்லிம்கள் யுத்தகளத்தில் போருக்கு தயாராக இருக்கும் வேளையில் அவர்களின் உடல், உள வலிமை சற்று பலவீனமாக இருந்தது. அவ்வேளையில் அவர்களை அறியாமலேயே அவர்களை சிறு உறக்கம் (தூக்கம்) ஆட்கொண்டது. அத்துடன் சிறிய மழை பொழிவும் நடந்தது.

Image result for உளவியல்சிற்றுறக்கம், சிறு மழை பொழிவு மூலமாக அந்த கூட்டம் என்ன இலாபம் அடைந்தது என்று என்று அறிவியல் ரீதியாக சற்று சிந்திப்பின் மேற்படி வசனத்தில் பெரும் ஒரு அறிவியல் உண்மை பொதிந்துள்ளது.

அதாவது சிறு உறக்கம் ஒருவகை எமது கவலையை மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் ஒரு காரணி. அத்துடன் எமது உடல், உள்ளம் சிறு உறக்கம் காரணமாக புத்துணர்ச்சி பெற்று சிறந்த தைரியம் அடைவதாக அண்மைய உளவியல் சார் உடலியல் மருத்துவ விஞ்ஞான ஆய்வுகள் கூறுகின்றது.

மேற்படி யுத்தகளத்தில் முஸ்லிம்களை அவர்களின் ஆரோக்கியத்தையும், தெம்பையும் அதிகரிக்க இவ்வாறு இறைவன் உண்டாக்கியதாக அல்குர்ஆன் கூறுகிறது. ஆனால் இதில் உளவியல் உண்மை பொதிந்துள்ளதாக இன்று நாம் காண்கின்றோம். மேற்படி யுத்தகளத்தில் இருந்த முஸ்லிம் வீரர்கள் இந்நிகழ்வை பற்றி கூறுகையில்....
"தங்களை அறியாமலே நாங்கள் உறங்கிறோம். இதனால் எங்கள் கையில் இருந்த வால் பிடி பிடியிழந்து வால் கீழே விழுந்தன"

அத்துடன் மிக அண்மையில் கண்டறியப்பட்ட மற்றுமொரு உளவியல் உண்மை என்னவெனில்....
சிறு தூறல் மழையில் எமது உள்ளம் மிகப்பெரும் மகிழ்வை அனுபவிக்கின்றது...
இந்நிலைப்பாடு தோற்றவியல் மேற்படி வசனத்தில் பொதிந்துள்ளதனை காணலாம்....

ஆகவே இவ்வாறான அண்மைய உளவியல் உண்மைகளை யார் பதினான்கு நூற்றாண்டுகள் முன்னர் கூறி இருக்க முடியும்....?????





No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages