Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Wednesday, April 11, 2018

WALL-E Cartoon

Image result for wall eAndrew Stanton தயாரிப்பில் 2008 இல் வெளிவந்த Sci-fi Animation Cartoon திரைப்படமே இது. Best Sci-Fi Movie of the Year என்ற விருதையும் பெற்றது.
இத்திரைப்படத்தில் உலகில் ஏற்பட்ட #Electronic_waste (e-கழிவு) மற்றும் #Solid_waste (திண்மக்கழிவு) மூலமாக ஏற்பட்ட பாதிப்பை பிரதிபலிப்பதாக அமைந்து.
உலகில் ஏற்பட்ட இப்பிரச்சினையை தீர்க்க Elysium (விண்வெளி குடியிருபுத் தொகுதி) என்ற ஒன்றை நிறுவி அங்கே மானிடர்கள் சென்று வசித்தனர்.
உலகில் இருந்த கழிவை அகற்றும் வேலையை செய்ய வோல் ஈ (Wall-E) என்ற ரோபோவை உண்டாக்கினர். அவ்வாறான ரோபோக்களில் இறுதியான ரோபோவின் வாழ்க்கை கதையாயே இத்திரைப்படம் வரைந்துள்ளது.
சிறுவர்கள் தொடக்கம் முதியோர் வரை அனைவரும் அவசியம் பார்க்கவேண்டிய திரைப்படம் இது எனலாம். காரணம் #தாவரம்_ஒன்றின்_வகிபாகம்_இவ்வுலகில்_என்ன என்பதை மறைமுகமாக காட்சிப்படுத்தப்படுகின்றது இத்திரைப்படம்.....
சமகாலங்களில் வளர்முக நாடுகள் இப்பிரச்சினையை அதிக அளவில் எதிர்நோக்குகின்றன. காரணம் அந்நாடுகளின் பொருளாதாரக்கொள்கை எனலாம். அபிவிருத்தி அடைந்த மேலைத்தேய நாடுகள் பொதுவாக ஈ கழிவு மற்றும் திண்மக்கழிவிற்கு ஓரளவு தீர்வை எட்டியுள்ளது. இருந்தபோதும் கீழைத்தேய நாடுகள் இப்பிரச்சினையை நாளுக்கு நாள் தீர்வை எட்ட முயற்சிகள் செய்து தோல்வியுருவதாகவே அமைந்துள்ளது. 
குறிப்பாக விலைகுறைந்த இலத்திரனியல் சாதனங்களின் பாவனை அதிகரிப்பு, அழிவடையாத திண்மப் பொருட்களின் பாவனை உயர்வு என்பன இதற்கு அடிப்படைக் காரணியாக அமைந்துள்ளது. 
Image result for wall e plantஅதேபோல் இத்திரைப்படத்தில் தாவரம் ஒன்றின் முக்கியத்துவத்தை மிக எளியதொரு காதல் ரசனையை கொண்டு காட்சிப்படுத்தியத்தில் இயக்குனரின் அலாதியான திறமை உணர் முடிகின்றது. 
உலகில் தாவரங்களின் செல்வாக்கு மிக இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இருந்த போதும் எமக்கு இதனைப்பற்றிய விழிப்புணர்வு இருந்தும் நாங்கள் பாராமுகமாக செயல்படுவது எமது சிந்தனயில் உள்ள பலவீனத்தை உணர்த்துகின்றது. உதாரணமாக நாம் ஒரு மரத்தை வெட்டுவதில் காட்டும் கரிசனை மரம் ஒன்றிற்கு நீர் ஊற்றுவதில் இல்லாமல் இருக்கின்றது. ஆகமொத்தத்தில் இயற்கையை சார்ந்த ஒரு விலங்கினக் கூட்டம் என்று கூறுவது மிகவும் பொருத்தமானது. 
"மரத்தை வளர்த்து மனித இனத்தை வளர்ப்போம்" என்ற நாமங்கள் வெறும் ஏடுகளிலும் ஏப்பங்களிலும் ஏவப்பட்டவைகள் மாத்திரமே. முடியும் என்றால் ஒரு மரத்தை உங்கள் வாழ்நாளில் உருவாக்கி காட்டுங்கள்.
அம்மரம் நிச்சயம் பெயர் கூறும் நாளைய தலைமுறைக்கு.....

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages