Mutur JMI

𝙅𝙪𝙣𝙖𝙞𝙙 𝙈𝙤𝙝𝙖𝙢𝙚𝙙 𝙄𝙝𝙨𝙝𝙖𝙣 𝐀𝐮𝐭𝐡𝐨𝐫 | 𝐏𝐮𝐛𝐥𝐢𝐬𝐡𝐞𝐫 | 𝐖𝐫𝐢𝐭𝐞𝐫 | 𝐅𝐫𝐞𝐞𝐥𝐚𝐧𝐜𝐞 𝐉𝐨𝐮𝐫𝐧𝐚𝐥𝐢𝐬𝐭 👉 𝙒𝙚𝙗𝙨𝙞𝙩𝙚 – www.jmi-mutur.com 👉 𝙈𝙖𝙞𝙡 – ihshanjm@gmail.com 👉 𝙁𝙖𝙘𝙚𝙗𝙤𝙤𝙠 – Ihshan J.M.I Mohamed - www.facebook.com/JMI.Ihshan 👉 𝙁𝙗 𝙥𝙖𝙜𝙚 Professional - Mutur JMI – www.facebook.com/IhshanJMI Personal - Ihshan JMI – www.facebook.com/MuturJMI 👉 𝙄𝙣𝙨𝙩𝙖𝙜𝙧𝙖𝙢 – Ihshan JMI - www.instagram.com/ihshan_jmi 👉 Contact 0771020030

Business

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Monday, April 23, 2018

கனவு வேட்டை.... (Inception)

Related imageபொதுவாக கனவுகள் பற்றி பேசினாலே பலருக்கு ஆர்வத்தை உண்டாக்கிவிடும். காரணம் அதில் உள்ள புதிர்நிறைந்த விடைதெரியாத வினாக்களே. கனவுகள் பற்றி மிக அண்மைக்கால ஆய்வுகள் பெருமளவில் திருப்தி கண்டுள்ள ஆய்வு முடிவுகளை வெளியிட்டவண்ணமே உள்ளது.

July 8 2010 இல் Christopher Nolan இன் இயக்கத்தில் வெளியா பிரசித்து பெற்ற திரைப்படமே INCEPTION (இன்செப்சன்) என்ற திரைப்படம். மேற்படி திரைப்படம் கனவுகளை திருடுதல் மற்றும் ஒருவரின் சிந்தனையில் கனவுகள் மூலமாக ஒரு கருவை அல்லது நோக்கத்தை உண்டாக்கி அவனது வாழ்வை திசைதிருப்பல் சம்மந்தமாக கொண்டு நகர்கின்றது.

மனிதனுக்கு மட்டும்தான் கனவுகள் உண்டாகுமா என்றால் நிச்சயமாக அவ்வாறு இல்லை. கனவு என்பது மூளையின் அதீதமிகு செயல்திறன் காரணமாக உண்டாகும் ஒருவகை விம்பத்தோற்றப்பாடு என்று சுருக்கமாக கூறிவிடலாம். ஆனாலும் இங்கே பல தெளிவற்ற விடை மாத்திரமே பலருக்கு உண்டாகும்.

கனவுகள் பற்றி பொதுவாக இறை நம்பிக்கை கொண்ட மானிடர்கள் மற்றும் இறை நம்பிக்கை அற்ற நாத்திகர்கள் இடத்தில் பெரும் ஒரு கருத்துமோதல் இருந்து வரத்தான் செய்கின்றது. ஆனால் நாம் இங்கே உள்ள பொதுவான நிறுவப்பட்ட அறிவியல் உண்மைகளை மாத்திரம் சற்று விளங்கிக்கொள்ள முயற்சிப்போம்.

கனவு என்பது நிம்மதியான ஆழ்ந்த உறக்கத்தின் போதே பெரும்பாலும் ஏற்படும். காரணம் அப்போதே மூளையின் சிந்தனைதிறன் உயிர்ப்பான நிலையில் செயற்படக்கூடியதாக அமையும். அதுமட்டுமன்றி மூலையில் நடைபெறும் இரசாயன மாற்றம் காரணமாக உண்டாகும் திரைப்படத்தை ஒத்த காட்சிப்புலம் கனவாக கருத்தப்படுகின்றது.

கனவுகள் மூன்றுவகைப்படும்.
1. நல்ல கனவு (சந்தோசம் மிக்கதானதும் வாழ்வில் நாம் ஆசைப்படும் நிகழ்வைக் குறித்துமானதாகவும் அமையும்)
2. கெட்ட கனவு (பயங்கரம், ஆபாசம், திகில் நிறைந்ததாக அமையும்)
Image result for dream3. குழப்பமான கனவு (அர்த்தமற்ற கனவுகளாக இவை கருதப்படும், தொடக்கம் முடிவு என்பவற்றில் தொடர்புடமை இருக்க மாட்டாது. பொதுவாக இவை யாவருக்கும் உண்டாகும். குறிப்பாக குழந்தைகளுக்கு ஏற்படக்கூடியதாக இருக்கும்)

ஒரு கனவு ஒரு வினாடி தொடக்கம் இருபது நிமிடங்களை எல்லையாக கொண்டதாக அமையும். ஆனால் கனவில் நாம் பல மணித்தியாலம் கண்ட உணர்வை உணர்கின்றோம். இதற்கான காரணம் மூலையில் அதீத செயற்பாடே அவ்வாறு எமக்கு உணர வைக்க வாய்பாகின்றது.

கனவுகளில் தொடக்கம், முடிவு என்பன பெரும்பாலும் எமக்கு நினைவில் இருப்பதில்லை. கனவின் நடுப்பகுதியே பெரும்பாலம் நினைவில் இருக்கும். குழப்பமற்ற கனவுகளில் தொடர்ச்சி தன்மை பெரும்பாலம் அமைவதில்லை. இருந்தும் சற்று தொடர்புடமை அமையப்பெற்ற வாய்ப்புண்டு.

தூக்கம் களைந்து எழுந்து ஐந்து நிமிடங்களில் கனவின் சுமார் 50 சதவீதமானவையும் இன்னும் 20 நிமிடங்களில் 90% கனவு நினைவுகள் மறந்துவிடும். ஆனாலும் சிலபகுதி நினைவில் இருக்கும். சிலருக்கு ஒரு நிகழ்வு ஏற்படும் போது இது எமது வாழ்வில் முன்பே நடந்தது போல சிந்தை உண்டாகலாம். இதற்கு அறிவியல் ரீதியாக விளக்கம் அளிப்பது சற்று கடினம்.

கனவுகள் ஏற்படும் நிலைமை.
1. பொதுவாக கனவுகள் நாம் அதிகம் ஆசைப்படும் காரணி கனவாக வரலாம்.
Image result2. சில பொழுதுகள் நீங்கள் கூற முற்படும் அல்லது குறித்த இடத்தில் நினைத்த விடயம் சடுதியாக மறந்துவிடும். மேற்படி காரணிகள் கனவில் தொடரலாம்.
3. தூங்கும் இறுதி நிமிடங்களில் நீங்கள் யோசித்த விடயம் கனவாக மாறலாம்.
4. சில பொழுதுகள் உங்கள் வாழ்வில் எண்ணிய அல்லது கற்பனை செய்த நிகழ்வுகள் கனவாக வரலாம்.
5. பெரும்பாலான கனவுகள் நீங்கள் எதைபற்றி அதிகம் சிந்திக்கின்ற பேசுகின்ற காரணியாக அமையும்.

கனவுகளில் மூன்று நிலை காட்சி காணப்படும்.
1. நீங்கள் குறித்த கனவில் உங்களை நீங்களே காணகின்ற நிலைமை.
2. நீங்கள் உங்களை காணமல் மற்றவர்களை காணும் தோற்றப்பாடு.
3. விம்பத்தோற்றப்பாடு நிலைமை.

Image result for dreamகனவுகளில் காண்கின்ற காட்சிகளில் உள்ள பொருட்கள், உருவங்கள் என்பன மிக நேர்த்தியானதாக இருக்கும். இங்கே காணப்படும் பொருட்களில் குறைபாடு காண்பது கடினம். இலகுவாக கூறுவதாயின் ஒரு மரத்தை நீங்கள் சாதரணமாக காணும் நிலைக்கும் கனவில் அம்மரத்தை காணும் நிலைக்கும் வேறுபாடுகள் உண்டு. அதாவது மரத்தின் நேர்த்தி தன்மை.

இன்னும் மூளை அதிகமாக வேலைசெய்வதன் காரணமாக உங்களில் கண்கள் மிகவேகமாக அசையக்கூடியதாக இருக்கும். இதன் காரணமாக திடீரென விழிப்பு ஏற்படவும் வாய்ப்புண்டு.

புனித குர்ஆன் கனவுகள் பற்றி வித்தியாசமான நிலைப்பாட்டை விபரிக்கின்றது.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

Pages